.

Pages

Wednesday, January 30, 2019

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட  ஆட்சியரக அலுவலகத்தில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (30.01.2019) ஏற்கப்பட்டது.

மகாத்மா காந்தி நினைவு தினமான ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை மலர் தூவி மரியாதை செலுத்தி அனைத்துத்துறை அலுவலர்களும் 2 நிமிடம் மௌனஞ்சலி செலுத்தி தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.

இதில் தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியான இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.   தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன்.  அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதை உணர்வேன்.   இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால்  உளமார உறுதியளிக்கிறேன்” என மாவட்ட ஆட்சித்தலைவர் படிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியில் கஜா மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு கூடுதல் திட்ட இயக்குநர் ராஜகோபால் சுன்கரா, வேளாண் இணை இயக்குநர் நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமீனாட்சி  மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.