.

Pages

Friday, January 25, 2019

பொங்கும் கிணறு: எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு (படங்கள்)

பேராவூரணி ஜன,25-
தஞ்சை மாவட்டம், பேராவூரணியை அடுத்த வலப்பிரமன்காடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் பொங்கி வரும் கிணற்றில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் ஆய்வு வட்டாட்சியர் முன்னிலையில் ஆய்வு நடத்தினர்.

வலப்பிரமன்காடு சிங்காரம் என்பவர் வயலில் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட, 40 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் இருந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் பொங்கி வருகிறது. ஆனாலும் 37 அடி தண்ணீர் நிறைந்து இருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் வெளியேறவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

இதுகுறித்து பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் அளித்த தகவலின் பேரில் தஞ்சை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை புதன்கிழமை அன்று கிணற்றை பார்வையிட்ட பின், புவியியல் மற்றும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளை ஆய்வு நடத்த உத்தரவிட்டார்.

இதையடுத்து வியாழக்கிழமை அன்று பேராவூரணி வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் முன்னிலையில் காரைக்காலில் இருந்து வந்திருந்த ஜெய்கணேஷ் என்பவர் தலைமையிலான 3 பேர் கொண்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவன அதிகாரிகள் நேரில் கிணற்றை பார்வையிட்டு நவீன கருவிகளைக் கொண்டு ஆய்வு நடத்தினர்.

பின்னர் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், '' பொதுமக்கள் இதுகுறித்து பயப்படத் தேவையில்லை. கிணற்று நீரில் எரிபொருள் தொடர்பான மூலக் காரணிகள் ஏதும் கண்டறியப்படவில்லை. வேறு ஏதேனும் காரணங்களாக என்பது குறித்து, கிணற்றில் உள்ள 37 அடி தண்ணீரை வெளியேற்றினால், தான் தெரியவரும். எனவே விரைவில் தண்ணீரை வெளியேற்றி விட்டு நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்ய உள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன'' என்றார்.
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.