.

Pages

Tuesday, January 22, 2019

பட்டுக்கோட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஜன.22
பட்டுக்கோட்டையில் மனோரா ரோட்டரி சங்கம், கோட்டை ரோட்டரி சங்கம், மிட்டவுன் ரோட்டரி சங்கம், பட்டுக்கோட்டை காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி திங்கட்கிழமை நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவர்கள் ஜி.வி தங்கையன், கே. குணசேகரன், டி.ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணியை பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து, மணிக்குண்டு அறந்தாங்கி முக்கம், பெரிய கடைத்தெரு உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தனர். அப்போது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.