அதிராம்பட்டினம், ஜன.26
அண்மையில் வீசிய கஜா புயலால் அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகம் சேதமடைந்ததையடுத்து, அதன் புனரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இதன் பணிகள் நிறைவுற்றதையடுத்து, இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மு.காதர் முகைதீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் மதுக்கூர் அப்துல் காதர் அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னர், அலுவகலத்தில் முஸ்லீம் லீக் கட்சி கொடி ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஹாஜி அதிரை அப்துல் காதர் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
முடிவில், அக்கட்சியின் துணைச் செயலாளர் அபுபக்கர் நன்றி கூறினார். இவ்விழாவில், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மதுக்கூர் பேரூர் தலைவர் என்.எம் அப்துல் அஜீஸ், பொருளாளர் ஏ.சேக் அலாவுதீன், துணைச்செயலாளர் ஏ.ஆர் நூர்தீன் உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
அண்மையில் வீசிய கஜா புயலால் அதிராம்பட்டினம் கடைத்தெரு பகுதியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகம் சேதமடைந்ததையடுத்து, அதன் புனரமைப்பு பணிகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இதன் பணிகள் நிறைவுற்றதையடுத்து, இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவிற்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மு.காதர் முகைதீன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் மதுக்கூர் அப்துல் காதர் அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். பின்னர், அலுவகலத்தில் முஸ்லீம் லீக் கட்சி கொடி ஏற்றி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஹாஜி அதிரை அப்துல் காதர் உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
முடிவில், அக்கட்சியின் துணைச் செயலாளர் அபுபக்கர் நன்றி கூறினார். இவ்விழாவில், மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது, மதுக்கூர் பேரூர் தலைவர் என்.எம் அப்துல் அஜீஸ், பொருளாளர் ஏ.சேக் அலாவுதீன், துணைச்செயலாளர் ஏ.ஆர் நூர்தீன் உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.