.

Pages

Friday, July 10, 2020

மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வாழ்வூதியம் வழங்கக்கோரி தனியார் பள்ளி ஆசிரியர்கள் பட்டினிப்போராட்டம் (படங்கள், வீடியோ)

அதிராம்பட்டினம், ஜூலை 10
கரோனா ஊரடங்கால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வாழ்வூதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளி சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் பட்டினிப்போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பட்டுக்கோட்டை கல்வி மாவட்டச் செயலாளர் என்.உதயகுமார் தலைமையில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியுடன் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.

இதில், பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் வாழ்வூதியம் வழங்க வேண்டும், எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் 3 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் வழங்க வேண்டும், நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும், தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வலியுறுத்தினர்.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக். மேல்நிலை பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பட்டுக்கோட்டை கல்வி மாவட்டச் செயலாளர் என்.உதயகுமார் கூறியது; (காணொளி இணைப்பு)

 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.