.

Pages

Friday, December 27, 2013

அதிரை பெரிய மார்க்கெட்டில் ரூ 50 க்கு விற்கப்படும் தாளன் சுறா மீன்கள் !

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தொழிலாக படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மீனவர்களின் வலைகளில் தாளன் சுறா மீன்கள் அதிகளவில் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வகை மீன்கள் அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படும் தக்வா பள்ளி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகின்றன. அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் தாளன் சுறா மீனை 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்கின்றனர். இந்த மீன்கள் மிகவும் சுவையாக இருக்கும் என்பதால், மீன் பிரியர்கள் போட்டிபோட்டு வாங்கிச் செல்கின்றனர். விலை மலிவாக கிடைப்பதால் மீன் பிரியர்களுக்கும், விரைவில் விற்று தீர்ந்து விடுவதால் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


5 comments:

  1. Aaha entha meenai aatdukare pol samaiththu edeyappaththukku sappetdal ......mmmmm suvai.....appateththagko.

    ReplyDelete
  2. எனக்கு மிகவும் பிடித்த மீன் வகைகளில் தாளன் சுராவும் ஒன்று ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நமது மார்கெட்டில் நான் மிகவும் பெரிய தாளன் சுறா மீன் வாங்கி வந்தேன் அந்த மீனை எங்கள் வீட்டில் சுத்தம் செய்யும்பொழுது அதன் வயிற்றில் ஏராளமான குஞ்சு பாம்புகள் இருந்ததை கண்ட எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அன்றிலிருந்து இந்த மீனை வாங்குவதில்லை எனவே உசார்....

    ReplyDelete
  3. ரொம்ப சல்லிசா இருக்கு.

    . குறிப்பு - அதிரை நியூஸ்க்கு ஒரு வேண்டுகோள் உங்கள் தளத்தில் தமிழ் டைப் செய்ய கூடிய வசதி இணைத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    பதிவுக்கு நன்றி.

    ஏன் இப்படி.
    கடலில் இடநெருக்கடியோ.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
    Replies
    1. கடலில் இடநெருக்கடி ஏற்பட்டாலும், சாப்பிடுவர்களின் குடலில் இடநெருக்கடி வராது.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.