அதிரையில் நேற்று 40.5 மில்லி மீட்டர் மழை பதிவாகிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. மேகம் மூட்டத்துடன் குளிர்ந்த காற்றும் வீசிவருகின்றன. அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம், பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.
மேலும் அதிரையின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுகின்றன. நல்ல மழை பெய்தும் பெரும்பாலான குளங்களில் போதுமான தண்ணீர் வரத்து இல்லை. வழக்கமாக தண்ணீர் வரும் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளே காரணம் என கூறப்படுகிறது.
Ennum 80 % malai veandum appothan kulagkal nerampum
ReplyDelete