.

Pages

Monday, December 2, 2013

குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் [ புகைப்படங்கள் ] !

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு புதுத்தெரு பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள் பேரூராட்சியை கண்டித்து கடந்த [ 30-11-2013 ] அன்று அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் இன்று காலை 10 மணியளவில் 8, 9, 10 ஆகிய வார்டுகளில் கடந்த சில மாதங்களாக போதுமான குடிநீரை விநியோகிக்கவில்லை எனக்கூறி இப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து பேரூராட்சி எதிரே உள்ள ஈசிஆர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் புறப்படுவதில் தாமதமாகின.

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை மனுவாக தந்தால் சம்பந்தபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேண்டுகோள் வைத்தனர். இருதரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை அடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இந்தப்பகுதி முழுதும் பரப்பரப்பாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து வட்டாசியார் தலைமையில் இருதரப்பினரோடு நடத்திய பேச்சுவார்த்தையில் 8, 9, 10 ஆகிய வார்டு பகுதிகளுக்கு குடிநீர் சீராக வழங்குவற்குரிய தேவையான நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.






  


4 comments:

  1. தள்ளுமுள்ளு,தடியடி கைது என்று இல்லாமல் சுமூக பேச்சு வார்த்தையில் முடிந்தமட்டும் சரியே ...அல்லாஹ் போதுமானவன்..........

    ReplyDelete
  2. கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், தரகர் தெரு ஆகியவற்றோடு புதுத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக வழங்குவதற்குரிய பணியில் பேரூர் நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக புதிதாக போர்வெல், வாட்டர் டேங் அமைத்தல் , நேரடி பீடர் லைன் கொண்டுவருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டால் எதிர்கால குடிநீர் தட்டுப்பாடை போக்க முடியும் என்பதோடு மட்டுமல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை ஆகியவற்றை தடுக்கவும் இயலும்.

    மக்கள் பிரதிநிதிகள், அலுவலர்கள், ஊழியர்கள் தங்களின் ஈகோகளை கலைந்து மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபட முன்வர வேண்டும். நீங்கள் வாங்குகின்ற சம்பளம் மக்கள் வரிப்பணம் என்பதை நினைவில் கொள்க.

    ReplyDelete
  3. எதுவாக இருந்தாலும் போராட்டம் ஒன்றே தீர்வு என்ற அளவுக்கு போய் விட்டது நமது ஜன நாயகம்.

    போரட்டகளில் கலந்து கொண்ட பெண்களுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. கோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமான நோக்கத்திற்கானது தான் என்றாலும், இப்போதெல்லாம், எல்லாப் போராட்டங்களிலும் பெண்களை வீதிக்கு அழைத்து வரும் போக்கு சரியானதாகப் படவில்லை.

    டிவிகளில் முகம் தெரிகிற அளவுக்கு பெண்களை முன்னிறுத்தி நடத்தப் படுகிற போராட்டங்களும், சேது ரோட்டில் பெண்கள் அமர்ந்தபடி செய்தித்தாள்களில் படங்கள் வருகிற படி நடத்தப் படுகிற போராட்டங்களும் இஸ்லாமிய பார்வையில் முறையானதல்ல.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.