.

Pages

Friday, December 20, 2013

அதிரை நியூஸ் எந்தவொரு நபரின் மிரட்டலுக்கும் அடிபணியாது !

அதிரை நியூஸ் - 'உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன்' வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த செய்திதளம். வணிகமற்ற பொதுநல நோக்கில் அதிரையில் வாழும் தன்னார்வலர்கள் இணைந்து அவர்களின் கடும் பணிச்சுமைக்கிடையில் அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக களஆய்வு செய்து ஊடக தர்மத்திற்கு உட்பட்டு தளத்தில் செய்தியாகவும், தலையங்கமாகவும், நேர்காணலாகவும் பதியப்பட்டு வருகின்றன. செய்தி சேகரிக்கும் பணிகளுக்காக உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் சிலர் எங்கள் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக தொடர்ந்து செய்திகளையும், ஆலோசனைகளையும் அவ்வப்போது வழங்கியும் வருகின்றனர்.

அரசியல் செய்யும் கட்சிகள், சமுதாய அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் செய்திகள், மரண அறிவிப்புகள், அரசு அறிவிப்புகள், தகவல்கள், உதவி கோருதல், வணிகச்செய்திகள், அதிரையின் முக்கிய தகவல்கள், அதிரையில் புதிதாக தொழில் முனைவோரை ஊக்கும் விக்கும் விதமாக அவர்களின் தொழில்குறித்த தகவலை இலவசமாக வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளை தெரு பாகுபாடின்றி வழங்கி வருகின்றோம். உள்ளூர் செய்திகள் மட்டுமல்லாமல் அதிரையை சுற்றி இருக்கக்கூடிய ஊர்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் கூடுதல் செய்தியாக தளத்தில் பதிந்து வருகின்றோம்.

அதே போல் வெளிநாடுகளில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை அந்ததந்த நாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் சிலர் அனுப்பி வைக்கும் மின்னஞ்சல் செய்திகளை நிர்வாகக்குழுவின் நெறிமுறைக்குட்பட்டு உடனுக்குடன் தளத்தில் பதியப்பட்டு, பதிந்த தகவலை அவர்களுக்கு முறையாக தெரியப்படுத்தி வருகின்றோம்.

இதுவரை அதிரையில் செயல்படும் எந்தவொரு அமைப்புகளும் எங்களிடம் தருகின்ற செய்திகளை, தொடர்ந்து புறக்கணிப்பதையோ அல்லது பதியாமல் வீட்டுவிடுவதோ இல்லை. அதேபோல் எந்தவொரு அமைப்பிற்கோ அல்லது அரசியல் செய்யும் கட்சிகளுக்கோ சார்பு / எதிர்ப்பு என்ற நிலையிலும் இருந்ததில்லை.

அதே போல் அதிரையில் உள்ள எந்தவொரு பகுதிகளிலும் நிகழும் செய்திகளை தொடர்ந்து புறக்கணிப்பதோ அல்லது எங்கள் பகுதியின் செய்தி இந்த வலைத்தளத்தில் வரவில்லையென யாரும் எங்களிடம் குறை கூறாத வகையில் தேடிச்சென்று செய்திகளை சேகரித்து வழங்கி வருகிறோம்.

தளத்தில் பதியும் செய்திகளுக்காக வாசகர்கள் வழங்கும் கருத்துகள் கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்தையும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்பட்டு வருகிறோம். தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - ஆகியன முன்னறிவிப்பின்றி நீக்கியும் வருகிறோம். பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் தொடரும் பட்சத்தில் பின்னூட்டப்பகுதியை முன்னறிவிப்பின்றி நிறுத்தியும் வைக்கின்றோம்.

அதேபோல் தளத்தில் பதியும் செய்திகளில் ஏதேனும் சமூக ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் படி அமைந்து இருந்து எங்களின் கவனத்துக்கு வரும் பட்சத்தில் இதுபோன்ற பதிவுகளை வாசகர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முன்னறிவிப்பின்றி நீக்கியும் விடுகின்றோம்.

சரி விசயத்திற்கு வருவோம்...
அதிரையின் வறண்ட குளங்களுக்கு நீர்ஆதாரத்தை கொண்டு வருவதற்காக கடந்த சில நாட்களாக அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை தரக்கூடிய செயல். இவற்றை நாங்கள் வரவேற்கிறோம் - வாழ்த்துகிறோம். இவர்கள் நடத்திய கூட்டங்களில் அழைப்பின் பேரில் தவறாது நாங்கள் கலந்துகொண்டு எங்களின் ஒத்துழைப்பையும், ஆலோசனையையும் அவர்களுக்கு வழங்க தவறியதில்லை. அவ்வப்போது இது தொடர்பான செய்திகளை அதிரை நியூஸ் தளத்தில் உடனுக்குடன் வழங்கி வந்தோம்.

இதுபோன்று அதிரையின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சமூக ஆர்வலர்களோ அல்லது அரசியல் செய்யும் கட்சிகளோ, சமுதாய அமைப்புகளாகளோ அதிரை பொதுநலன் சார்ந்த எந்தவொரு சேவைகளில் ஈடுபட்டாலும், இவர்கள் செய்யும் அரும்பணிகளை ஊக்குவிக்கும் விதமாக தளத்தில் செய்தியாக வெளியிடுவதை முதன்மையாக கொண்டுள்ளோம். இதில் எந்தவொரு சார்பு / எதிர்ப்பு நிலையில் என்றும் நாங்கள் இருந்ததில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரையில் வாழும் குறிப்பிட்ட பகுதியினருக்காக அதிமுகவினர் மேற்கொண்ட பணியை புகைப்படங்களுடன் செய்தியாக சகோதர வலைத்தளமாகிய அதிரை போஸ்ட் வெளியிட்டது. இவற்றை அனுமதியின் பேரில் அதிரை நியூஸ் ஆசிரியரால் எடிட் செய்யப்பட்டு தளத்தில் செய்தியாக வெளியிடப்பட்டன.

கடந்த சில நாட்களாக மும்முரமாக அரும்பணிகளை மேற்கொண்டு வரும் அதிரை பேரூராட்சி தலைவர் இந்த செய்தியை தாங்கி வந்ததற்காக எங்களின் வலைதளத்தை கண்டித்து கருத்தை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த காணொளியை பார்வையிட்ட எங்களுக்கு பெறும் அதிர்ச்சியை வரவழைத்ததோடு மட்டுமல்லாமல் ஆச்சரியமாகவும் இருந்தது. இந்த செய்தியை பொறுத்தவரை எந்தவொரு நபர்கள் செய்யும் அரும்பணிகளை பற்றி குறை கூறுவதாக அமைந்திருக்கவில்லை. இவற்றை வாசித்த பெரும்பாலான வாசகர்களுக்கு நன்கு விளங்கும்.

இதுகுறித்து வலைதள நடத்துனரிடம் நேரடியாக கருத்தை பெற்று நேர்காணலை அதிரை வலைதளங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இந்த தளத்தை கண்டித்து செய்தி வெளியிடும் அளவிற்கு பிறர் பாதிப்படையும் செய்திகள் அதில் இடம்பெறவில்லை. தன்னார்வலர்கள் இணைந்து  பொதுநல நோக்கில் தனது சொந்த செலவினங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்த சேவையை செய்து வருகிறார்கள். இந்த செயலால் அவர்களின் மனது மிகவும் வேதனையடைந்துள்ளன.

அதிரை நியூஸை பொருத்தவரை ஊடக தர்மத்திற்கு உட்பட்டே செய்திகளை வாசகர்களுக்கு வழங்கி வருகின்றோம். எந்தவொரு நபரின் குறுகீடுகளுக்கு தலைசாய்பதோ அல்லது மிரட்டலுக்கு அடிபணிவதோ விரும்பாது என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு

39 comments:

  1. இதுவரை அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக களஆய்வு செய்து, ஊடக தர்மத்திற்கு உட்பட்டு, தளத்தில் செய்தியாகவும், தலையங்கமாகவும், நேர்காணலாகவும் வழங்கி சிறப்பாக செயல்படுகையில்,

    அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டு உண்மையும் அறிந்த பிறகு, ஒரு தனிப்பட்ட கட்சி , அதே சமயத்தில் தனிப்பட்டு ,செய்வதாகவோ அல்லது தாங்கள் செய்வது போல் நடித்தோ நாங்களும் செய்கிறோம் என்று மக்களை குழப்பி வந்த வாய்ப்புகளை இதிலும் நீனா நானா என்று இழுபறியில் கொண்டு போகும் செயலாகிய அந்த செய்தியை வெளியிட்டது நல்லதல்ல.

    காரணம் ஆரம்ப நிலை அதிரை நியூசுக்கு நல்லாவே தெரியும் போது ஆதாரமில்லாத இது நிச்சயம் போட்டிச் செயல் என்று தெரிந்த பிறகு இதை புறக்கணிப்பதே மேல்.

    எல்லா செய்தியையும் போடலாம் ஆனால் ஊர் நலனுக்கு உலை வைக்கும் செய்தியை புறக்கணிப்பதே சேவை ஊடகத்துக்கு அழகு!

    உண்மையிலேயே ஊர் நலனுக்காக துவங்கிய ஊடகம் ,ஊரின் சேவை தடைபடும் வகையில் அமையும் என அறிந்ததை தவிர்ப்பதே மேல்.

    உண்மையான அதிரை நலன் அதிமுக வுக்கும் இருக்குமேயானால் அஸ்லத்தோடு அல்ல, அந்த சமூக ஆர்வலர்களோடு இணைந்து கொள்வதே கட்சியின் பெருந்தன்மைக்கு அடையாளம்.

    ஒருவேளை சமூக ஆர்வலர்களின் பட்டியலில் இல்லாத பகுதிகளுக்காக மட்டும் களம் இறங்கி இருந்தால் பாராட்டலாம். ஆனால் அதற்கு தருணம் இதுவல்ல! பட்டியலில் இல்லாத பகுதிகளுக்கு என்று செய்தியிலும் குறிப்பிடவில்லை. இப்போது திருத்தமும் செய்யப்பட்டிருக்கு!

    இதுவரை பெரும்பாலும் நல்லதையே செய்தீர்கள் ஆனால் இதில் இப்ப இடிக்குது!

    இப்படிக்கு
    Cn. அஸ்லம் கட்சியோ Mr.அஜீசு கட்சியோ சாராத அதிரைக்காரனில் ஒருவன்


    .

    ReplyDelete
    Replies
    1. அன்புச்சகோதரர் ஜெஹபர் சாதிக் முதலில் ஊரில் நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் விளங்கிக்கொண்டு கருத்திடுங்கள்...

      பேரூராட்சி தலைவர் மேற்கொள்வது அதிரை சிஎம்பி வாய்க்கால் இணைப்பில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வருவதற்கு உரிய முயற்சியில் உள்ளார்.

      அதிமுகவினர் முயற்சித்து வருவது ஏரிகளை நிரப்புவதற்கும், குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்குமான முயற்சி.

      அதிரை நகர இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இன்று நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிரையின் அணைத்து குளங்களுக்கும் நீர் ஆதாரத்தை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

      மேலும் மேலத்தெரு - கீழத்தெரு - பிலால் நகர் பகுதியை ஒட்டிய செடியன் குளத்திற்கு தண்ணீரை கொண்டு வருவதற்காக பெரிய ஜும்மா பள்ளி கமிட்டியினர் எதிர்வரும் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேச உள்ளதாக தகவலும் வந்துகொண்டு இருக்கின்றன.

      ஆக மொத்தத்தில் அதிரை பொதுநலன் சார்ந்த சேவைகளில் யார் யார் ஈடுபட்டாலும் அவர்களை ஆதரிப்பது நமதூர் செழிப்படைய நிச்சயம் உதவும்.

      ஊர் நலனுக்காக போட்டிபோட்டுகொண்டு சேவையில் ஈடுபடும் அனைத்து நல் உள்ளங்களையும் ஆதரிப்போம் - பாராட்டுவோம் - வாழ்த்துவோம்.

      Delete
  2. பதிவுக்கு நன்றி.

    ஊடகத் துறையில் இதெல்லாம் சகஜம், மக்களும் ஒரு நிலையான குணத்தில் இருக்க மாட்டார்கள்.

    யாரும் எதுவும் சொல்லட்டும், நமக்கென்று இருக்கின்ற பாதையில் நாம் பயணம் செய்கின்றோம்,.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  3. தண்ணீருக்காக ஏங்கியது போய் இப்போது நானா நீயா என்ற நிலையில் நமதூர் உள்ளதை நினைத்து வேதனையாய் உள்ளது. பொது நலனில் அக்கறைகொண்டு செய்பவர்கள் அவர்கள் செய்யும் நற்ப்பணியில் கட்சி வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து பங்குகொள்ள வேண்டும் அப்படி அவர்கள் ஒத்து வராமல் தனிப்பட்ட முறையில் நலப்பணியினை செய்யத் தொடங்கினால் ஊர் நலன் கருதி அதை கண்டுகொள்ளாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதே கண்ணியமாகும். காரணம் நமதூரின் 17 குளங்களுக்கும் ஒரு சாரார் மட்டும் செயல்பட்டு தண்ணீர் கொண்டுவருவது சிரமமானதே.! அக்கறை கொண்டு செயல் படுபவர்களை விமரிசிக்காமல் இருப்பது அனைவருக்கும் நலம்பயக்கும்.

    அடுத்து.......

    இதே அதிரை நியூஸில் பேரூராட்சித் தலைவர் அஸ்லம் அவர்கள் இது வரை ஊருக்காக செய்துள்ள நலப்பணிகளை தவறாது தொடர்ந்து பதிந்திருக்கிறது. அவர்களுடைய பேட்டியை அதிகமாக கானொளியில் வெளியிட்டிருப்பதும் அதிரை நியூஸ் தான் என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும். உள்ளூர் நிகழ்வுகளை உடனுக்குடன் நமதூர் வாசிகளுக்கு அறியத்தருவதே அதிரை நியூஸின் நோக்கம்.

    ஆகவே அனைத்து செய்திகளையும் பாகுபாடின்றி யாதொரு சார்பு நிலையன்றி பதிந்து வருகிறது.

    தாங்கள் உண்மைநிலை அறியாமல் அளித்த இந்தக் காணொளிப் பேட்டியை, வலைதள நாகரீகம் பேணாமல் அதை வெளியிட்டுள்ளனர்,

    படிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்வார்கள்.

    ReplyDelete
  4. ஊடகத்துரையின் நடுநிலை யாளர்களுக்கு இதுபோன்ற சாடுதல்கள் ஏற்படுவது சகஜமே. இருப்பினும் எதையும் ஆதரிக்காமல் செய்தி என்ற அடைப்படையில் யாரையும் குறிப்பிடாமல் வெளியிடப்படும் தகவல்களுக்கு இதுபோன்ற நேரடி அறிவிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்த்திருக்கலாம் செய்திகளை கூட மட்டுறுத்தல் செய்யும் நமதூர் மக்களை பார்க்கும் போது வேடிக்கையே மிஞ்சுகிறது. தனி நபர் தாக்குதல் என்பது ஒரு மனிதரை அநியாயனமான முறையில் அவதூறு பரப்புவதே... இதில் நிச்சயமாக நாம் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் காரணம் 'அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ள திரை நீக்கப்பட்டு அவர்களை துஆக்கள் அங்கீகரிக்க படுகின்றன' மேலும அவர்களின் நோக்கம் இந்த ஊடகம் நம்மை புகழவில்லையே என்ற ஆதங்கமாகவும் இருக்கலாம்.அல்லது இந்த ஊடகம் அல்லது இந்த அமைப்பு நம்மை சாராத வரைக்கும் அதை மட்டம் தட்ட வேண்டும் என்று ஆதிக்க வர்க்கம் இதை ஒரு சந்தர்ப்பமாகவும் பயன்படுத்தலாம்.எது எப்படியோ பத்திரிக்கை தர்மம் காக்கப்படவேண்டும் .வார்த்தைகளாகவும் எழுத்துக்களாகவும் வெளிப்படும் செய்திகள் டியுபிளிருந்து வெளிப்படும் பற்பசை போன்றது அதை திரும்ப அந்த டியுபினில் செலுத்துவது கடிணமான செயல்.

    ReplyDelete
  5. 1000 per 1000 sollu vaargal. Yethuvanalum ullathai sollungal. Nallathai seiyunga
    Allah ungaluku arul purivanaha ...ameen

    ReplyDelete
  6. உங்கள் தளத்தில் வரும் செய்திகள் பொதுவாக உள்ளது. இதை குறை கூற முடியாது. உங்கள் சேவை அனைவருக்கும் தேவை.

    ReplyDelete
  7. அதிரை நியூஸ் சேவை பாராட்டப் படவேண்டியவை. பொதுவாழ்வில் இறங்கி விட்டால் விமரிசனகளும் வரத்தான் செய்யும். அதை நீங்கள் பொறுமையுடன் கையாளுங்கள். அல்லாஹ் நன்மையாகித்தருவான்.

    ReplyDelete
  8. உள்ளூர் செய்திகளையும் மற்ற செய்திகளையும் உடனுக்குடன் பதிந்து எங்களைபோல் வெளிநாட்டில் வாழும் அதிரையர்களுக்கு வழங்கி வருகிறீர்கள். பாராட்டிற்குரியவை. அதுபோல் சமீபத்தில் குலத்திற்கு தண்ணீர் கொண்டு வர பாடுபட்டு வரும் பேரூர்ராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் சிறப்பான பணியையும் தளத்தில் பதிந்து இருந்தீர்கள்.அது போல AIADMK செய்து வரும் நலப்பணிகளையும் பதிந்துள்ளீர்கள். இதில் தவறு ஒன்றும் இல்லையே.

    ReplyDelete
  9. மறப்போம்; மன்னிப்போம்; ஒன்றுபட்டு ஊருக்கு நன்மைகள் செய்வோம்.

    ReplyDelete
  10. அதிரை நியூஸ் இன் பனி மகாத்தானது தங்களின் பனி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  11. தனனைப்ப்றியோ, தான் சார்ந்த எதைப்பற்றியோ தவறாக அலது அவதூறு ஒருவர் கூறினால் கண்டனம் என்ற கண்டிப்பை வெளிப்படுத்துவார்கள்.

    இங்கு ஊர் வளர்ச்சிக்கு போட்டிப்போட்டு செயல்படுவதை இருக்கும் ஊடகம் வெளிப்படுத்தவேண்டும். அதனை செய்தியாக வெளியிட்ட அதைரை நியுஸ்-க்கு கனடன்பம் என்றால் ஆயிரம் கண்டனம் வந்தாலும் அதிப்பற்றி கவனம் வேண்டாம். செய்யும் சேவையை திறம்பட நீங்கள் செய்யுங்கள். மக்கள் என்றுமே உங்கள் உண்மையின் பக்கம்தான் நிற்பார்கள்.

    பொதுவாக அரசியல் வாதிகள் அவர்களுக்கு ஒட்டு ஒன்றுதான் முக்கியம். அதற்காக எதுவும் செய்வார்கள். இதற்கிடையில் ஊர் வளர்ச்சி ஓங்க வலைத்தளங்கள் இவ்வாறு செய்திகள் வெளி இடுவது அதன் கடமை.

    தன்னைப் பற்றி செய்திகள் போற்றியோ தூற்றியோ வர வேண்டும் என்பது நவீன அரசியல் என்பது தெரியாதா என்ன ?

    எந்தவித ஆதாயம் இல்லாமல் சேவைச் செய்துவரும் தாங்கள் உயர்ந்தவரே. உங்களைப் பற்றி ஓட்டெடுப்பு நடத்தினால் மக்கள் உங்கள் பக்கமே.

    வாழ்க அதிரை நியுஸ் ! வளர்க அதன் சேவை !!

    ReplyDelete
  12. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ! இன்னைக்கு எதிரி நாளைக்கு நண்பன். சேர் ஒன்றுமே நோக்கம். இதத்தான் இந்திய அரசியலில் காண்கிறோம். அதேப் பார்வை ஊடகம் மேல் பட்டால் ஊடகம் இன்னும் நல்ல வளரும். அதிரையின் நம்பர் ஒன ஊடகம் என்று பெயர் எடுக்க இது போன்ற வாழ்த்துக்கள் அவசியம் வேண்டும். அதற்காகக் தாங்கள் செயல் புரியவில்லை. இருந்தாலும் அந்த பரிசு தானாகவே வரந்து சேரும். அதற்க்கு இது போன்ற வாழ்த்துக்கள் அவசியம்.

    ReplyDelete
  13. கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாவுல இருக்கு cmp வாய்க்கால் வெட்ட நீர் வருமா அல்லது யாருக்காகிலும் பேர் வருமா என்பதாக திசை திரும்புகிறது ?
    உண்மையை மட்டும் உரக்க உரையுங்கள் உங்களை யாரும் மிரட்டியதாக எண்ணவேண்டாம்
    தூங்கி கொண்டு இருந்த அதிமுக வினரை தட்டி எழுப்பிவிட்டீர் நீங்களும் நம் சேர்மன்,மற்றும் செயல் வீரர்களும் வாழ்த்துகள் அனைவருக்கும்

    செய்திதாள் என்றாலே ஜோசியம் முதல் ஜோக் வரை ,,,நல்லது முதல் கெட்டது வரை பதியப்படும்

    இருவரும்[சேர்மன் அவர்கள்,அதிரை நியூஸ் ] சமுதாயப்பணிகளை தொய்வில்லாமல் தூற்றலையும் போற்றலையும் சமமாய் கருதி செயல் படுங்கள்

    ReplyDelete
  14. உங்கள் சேவை இந்த ஊருக்கு அவசியம் வேண்டும்.

    ஊடகத்துறை மிகவும் வலிமை வாய்ந்தது. அதன் சேவையில் தான் அனைவரும் வளர்கிறார்கள்.

    ReplyDelete
  15. அவரவருக்கு தெரிந்த அறிந்த நல்ல சேவை செய்யும்போது அது மற்றவருக்கு சிலர் தூண்டுதலின் காரணமாகத் தவறாக தோற்றம் தெரிகிறது என்றால் அதைப்பற்றி என்ன செய்வது ? அவரவரின் சேவையைத் தொடர வேண்டும்.

    ReplyDelete
  16. அதிரை நியூஸ் அதிரைக்கு கிடைத்த ஒரு மிக பெரும் பொக்கிஷம் ஒரு நல்லது செய்யனும் என்ற பல தடங்கள் வரத்தான் செய்யும் எதையும் பற்றி கவலைப் படாமல் தனி வழியில் உங்கள் பணி சிரக்கட்டும் எது நல்லது எது கேட்டது என்பது உங்கள் வாசரக்ளுக்கு தெரியும்.

    ReplyDelete
  17. அன்புள்ள சகோதரர்கள் அனைவருக்கும்...

    யாரும் முன் வந்து எடுத்து செயல்படுத்தாததை சில தன்னார்வலர்கள் முன் வந்து ஊரின் பேரூராட்சி மன்ற தலைவர் என்ற அடிப்படையில் சேர்மனை அணுகி முயற்சி எடுத்திருக்கிறார்கள், அதற்கு சேர்மனும் முன் வந்து அவர்களுடன் சேர்ந்து முயற்சி செய்கிறார். பாராட்டப்பட வேண்டிய ஒன்று...

    அதே நேரம், அதிரை நியூஸ் செய்தி படி, அ.தி.மு.க வினரும் இதில் தங்களின் பங்களிப்பு வேண்டும் என்ற நோக்கத்தில் சேர்மன் குரூப் முயற்சி செய்யாத மற்ற குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க வினர் சேர்மன் குரூப்பை குறை சொல்லாமலும் அவர்களின் பணிக்கு இடையூறு இல்லாமலும் மற்ற வேலைகளை செய்து வருவதும் பாராட்டுக்குரிய ஒன்று.

    இனி ஊடகத்துறை பக்கம் வருவோம்...

    ஒரு ஊடகம் என்பது, நிகழ்வுகளை அப்படியே உள்ளது உள்ளபடி மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் ஒரு கருவி, அதே நேரம் செய்தியின் நம்பகத்தன்மையை அலசி ஆராயாமல் வெளியிடக்கூடாது என்பது அதன் விதி.

    ஒரு ஊடக நிறுவனமோ அல்லது செய்தி வெளியிடும் வலைதளங்களோ ஒரு சார்பு செய்திகளை மட்டும் பதியக்கூடாது. ஆனால் சேர்மன் சொல்வது போல் அதிரை நியூஸ் குறிப்பிட்ட அந்த செய்தியை போடாமல் இருந்தால் அது ஊடக தர்மத்திற்கு எதிரான செயல். ஊடகவியலாளர்கள் என்று தங்களை கருதிக்கொள்ளும் அதிரையில் சிலர் இதை யோசித்தால் அதிரை நியூஸ் செய்தது தவறில்லை என்று புரியும்.

    ஆகையினால், திட்டங்கள் நிறைவேற ஒருவரை மட்டும் சார்ந்தில்லாமல் அனைவரும் வெவ்வேறு முயரற்சித்தாவது நம்மூரின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு வர பாடு பட வேண்டும்.

    தயவு செய்து யாரும் அரசியலுக்காக இல்லை என்று சொல்லி அரசியல் செய்ய வேண்டாம்.

    ReplyDelete
  18. உங்களுடைய சேவை அதிரைக்கு தேவை.
    அரசியல்வதிஹல் தங்களுக்கு தேவை படும்போது பயன்படுத்தி ஆதயம் தேடிகொள்வதும். நடுநிலையான செய்தியை போடும்போது எதிர்ப்பது இதுதான் இவர்களின் வேலை.
    அதிரை நியூஸ் க்கு எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
  19. உங்கள் தளத்தில் வரும் செய்திகள் பொதுவாக உள்ளது. இதை குறை கூற முடியாது. உங்கள் சேவை அனைவருக்கும் தேவை..அதிரை நியூஸ் அதிரைக்கு கிடைத்த ஒரு மிக பெரும் பொக்கிஷம் ஒரு நல்லது செய்யனும் என்ற பல தடங்கள் வரத்தான் செய்யும் எதையும் பற்றி கவலைப் படாமல் தனி வழியில் உங்கள் பணி சிரக்கட்டும் எது நல்லது எது கேட்டது என்பது உங்கள் வாசரக்ளுக்கு தெரியும்..உங்கள் சேவை இந்த ஊருக்கு அவசியம் வேண்டும்.

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. சேக்கனா,
    // முதலில் ஊரில் நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் விளங்கிக்கொண்டு கருத்திடுங்கள்...//

    இந்த வார்த்தையை குறிப்பிட்டதால் நானும் உங்களை குறுக்கிடுகிறேன். எந்த வளைதளத்தை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிட்டீர்களோ அதன் கடந்த கால வரலாறு, செய்தியின் தன்மை, அதில் வரும் முகமோ,முகவரியோ இல்லாத பல கமென்டுகளை பார்த்திருந்தால் அதை ஒரு ஆதாரமாகக் கொண்டு நிச்சயம் வெளியிட்டு இருக்க மாட்டீர்கள். ஏன் இப்ப கூட முகமோ முகவரியோ புனைப்பெயரோ இல்லாத அதில் வந்த முதல் கமென்டு இருக்காது.(நீக்கப்பட்டிருக்கு) அதில் என்ன மர்மம் என்பதையும் புரிந்தால் சரி.

    //ஒருவேளை சமூக ஆர்வலர்களின் பட்டியலில் இல்லாத பகுதிகளுக்காக மட்டும் களம் இறங்கி இருந்தால் பாராட்டலாம். ஆனால் அதற்கு தருணம் இதுவல்ல! பட்டியலில் இல்லாத பகுதிகளுக்கு என்று செய்தியிலும் குறிப்பிடவில்லை. இப்போது திருத்தமும் செய்யப்பட்டிருக்கு!//

    இதயும் நீங்கள் கவனித்திருக்க வேண்டும். நான் சொல்வது , உங்களால் ஆதாரப்பூர்வமாக அறிய முடியும் போது ஊர் நலனுக்கு வில்லங்கம் ஏற்படும் என தெரிந்த செய்தியை அதன் உண்மை அறிந்து உங்க ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தால் யாரும் தவறு காண முடியாது. சமூக ஆர்வலர்கள் செய்யும் போது அதற்குள் அதில் ஏன் கட்சியும் முளைக்கிறது என்பதே எனது ஆதங்கம். ரென்டு பேரும் சண்டையிட்டு ரெண்டுமே இல்லாமெ கெட்டுவிடக்கூடாது என்பதே முக்கியம். ஏன் போன வருசம் செய்ய வில்லை என கேளுங்கள் அப்ப புரியும் அவங்களின் சுயரூபம்!

    //ஊர் நலனுக்காக போட்டிபோட்டுகொண்டு சேவையில் ஈடுபடும் அனைத்து நல் உள்ளங்களையும் ஆதரிப்போம் - பாராட்டுவோம் - வாழ்த்துவோம்.//

    அதோடு போட்டி போட்டு அதனால் வருவதை தடுக்கும் சுய நலமிகளை குட்டுவோம்!

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. சேக்கனா,
    // முதலில் ஊரில் நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் விளங்கிக்கொண்டு கருத்திடுங்கள்...//

    இந்த வார்த்தையை குறிப்பிட்டதால் நானும் உங்களை குறுக்கிடுகிறேன். எந்த வளைதளத்தை ஆதாரமாகக் கொண்டு செய்தி வெளியிட்டீர்களோ அதன் கடந்த கால வரலாறு, செய்தியின் தன்மை, அதில் வரும் முகமோ,முகவரியோ இல்லாத பல கமென்டுகளை பார்த்திருந்தால் அதை ஒரு ஆதாரமாகக் கொண்டு நிச்சயம் வெளியிட்டு இருக்க மாட்டீர்கள். ஏன் இப்ப கூட முகமோ முகவரியோ புனைப்பெயரோ இல்லாத அதில் வந்த முதல் கமென்டு இருக்காது.(நீக்கப்பட்டிருக்கு) அதில் என்ன மர்மம் என்பதையும் புரிந்தால் சரி.

    //ஒருவேளை சமூக ஆர்வலர்களின் பட்டியலில் இல்லாத பகுதிகளுக்காக மட்டும் களம் இறங்கி இருந்தால் பாராட்டலாம். ஆனால் அதற்கு தருணம் இதுவல்ல! பட்டியலில் இல்லாத பகுதிகளுக்கு என்று செய்தியிலும் குறிப்பிடவில்லை. இப்போது திருத்தமும் செய்யப்பட்டிருக்கு!//

    இதயும் நீங்கள் கவனித்திருக்க வேண்டும். நான் சொல்வது , உங்களால் ஆதாரப்பூர்வமாக அறிய முடியும் போது ஊர் நலனுக்கு வில்லங்கம் ஏற்படும் என தெரிந்த செய்தியை அதன் உண்மை அறிந்து உங்க ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தால் யாரும் தவறு காண முடியாது. சமூக ஆர்வலர்கள் செய்யும் போது அதற்குள் அதில் ஏன் கட்சியும் முளைக்கிறது என்பதே எனது ஆதங்கம். ரென்டு பேரும் சண்டையிட்டு ரெண்டுமே இல்லாமெ கெட்டுவிடக்கூடாது என்பதே முக்கியம். ஏன் போன வருசம் செய்ய வில்லை என கேளுங்கள் அப்ப புரியும் அவங்களின் சுயரூபம்!

    //ஊர் நலனுக்காக போட்டிபோட்டுகொண்டு சேவையில் ஈடுபடும் அனைத்து நல் உள்ளங்களையும் ஆதரிப்போம் - பாராட்டுவோம் - வாழ்த்துவோம்.//

    அதோடு போட்டி போட்டு அதனால் வருவதை தடுக்கும் சுய நலமிகளை குட்டுவோம்!

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. சேக்கனா,

      // முதலில் ஊரில் நடந்து வரும் நிகழ்வுகளை முழுவதும் விளங்கிக்கொண்டு கருத்திடுங்கள்...//

      அன்புச் சகோதரர் ஜெஹபர்

      வலைக்கு முஸ்ஸலாம்

      சம்பந்தப்பட்டவரிடம் உறுதி படுத்தப்பட்ட பிறகு தான் அதிரை நியூஸ் குழுவினர் செய்தி வெளியிட்டுள்ளனர். மேலும் இது குறித்து விரிவான விளக்கம் தருவதாக அதிரை பேரூராட்சி துணைத்தலைவர் பிச்சை அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்.

      Delete
    2. விளக்கம் சமூக ஆர்வலர்களுக்கு பங்கம் இல்லாத உருவாக்கப்படாத உண்மை விளக்கமாக இருந்தால் நிச்சயம் பாராட்டலாம். நீங்கள் ஏற்கனவே ஆதாரமாக கொன்டதயும் சற்று தெளிவாக ஆராயவும்.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. அதிரைநியூஸ் சேவை மக்களுக்கு எப்போதும் தேவை....
    அரசியல் உள்ளவர்களுக்கு பத்திரிக்கை(ஊடகம்)துறையின்
    பன்மை தெரியுமா...???
    உள்ளதை உள்ள படியாக செயிதிகளை மக்களளுக்கு கொண்டு போகும்
    ஒரே நோக்கம்தான் ஊடகம் "அரசியல்கூடம்" அல்ல...
    அரசியல்வாதி தங்களுக்கு தேவை படும்போது பயன்படுத்தி அவர்கள் ஆதயம் தேடிகொள்வது இவர்களின் வேலையாக இருக்கிறது...
    இவர்களுக்கு முற்றுப் புள்ளி வச்சே ஆகவேண்டும்...
    அவரல்களை கொஞ்சம் ஓசத்தி பேசினால் நம்மளை தட்டிக் கொடுப்பது போல் நடிப்பார்கள். நாடகக் காரர்கள்......,
    அவர்களுக்கு பிடிக்கதேவர்களுக்கு நாம் சலாம் சொன்னால் கூடே நம்மவர்களையும் எதிரிகாளாக பார்க்கிற கூட்டம்....,
    இவர்கள் மறுமையின் சிந்தனையேய் மறந்துவிட்டார்களா...???
    ஏன் எப்படி ஒரு குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்...???
    இவர்களுக்கு பதவி கிடைத்தால் அல்லாஹ்வை மறந்து விடுகிறார்களோ என்னமோ தெரிய வில்லை....,
    நீங்கள் யாருக்கும் பயப்பிடுனும் என்று அவசியமில்லை உண்மையானவர்களுக்கு ஏக இறைவனின்
    பாதுகாப்பு கண்ண்டிப்பாக கிடைக்கும் ...


    sirajudeen - MST

    00971551663700
    DUBAI

    ReplyDelete

  24. அதிரைநியூஸ் நடு நிலைக்கு பாராட்டுககள் வாழ்த்துகள் உங்களின் சேவை என்றென்றும் எங்களுக்கு தேவை

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

    கடந்த ஒரு சில நாட்களாக அதிரையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் பணியில் நமதூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் போன்ற ஒரு சிலருடைய முயற்சியால் நடை பெற்று வந்தன என்பது நாம் எல்லோரு அரிந்த ஒன்று இது சமந்த்தப்பட்ட துரை அதிகாரிகளையெல்லாம் சந்திது மனு கொடுத்து வந்தார்கள். இது எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய விசையம் தான் இதில் யாருக்கும் இரண்டு கருத்து கிடையாது.பூனைக்கு யார் மணி கட்டுவது என்று நினைத்து கொண்டுடிருக்கும் வேலையில் சமூக ஆர்வலர்களின் முயற்ச்சி மிக் பாராட்டப்பட வேண்டி விசையம் இது விசையமாக அதிரைநியூஸ் வெளியான வீடியோ மற்றும் போட்டோக்களையும் நாம் அனைவரும் பார்த்தோம் மிக்க மகிழ்ச்சியாகவும் இருந்தது.எந்த ஒரு விசையமாக இருந்தாலும் போட்டி என்ற ஒன்று அவசியம் தேவை தான் போராமை கொள்வதென்பது தான் கூடாது இந்த போட்டி தொடரத்தான் வேண்டும் அப்போது தான் ஊர் செழிப்படையும். அதிரை நகர அதிமுக வினரும் தமது பங்குக்கு களத்தில் இறங்கி பணி ஆற்றிவருவது ஆர்வமான ஒன்றே இதை வரவேற்க வேண்டிய ஒன்றே. அதிரைநியூஸ் நடு நிலையை நாம் அவசியம் பாராட்ட வேண்டும் அதிரையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உடனுக்கு உடன் பாகுபாடு இன்றி வெளி நாடுகளில் வாழும் அதிரையருக்கு சாதி மதம் அரசியல் என எதுவும் பாராமல் தனது நடு நிலையான சேவை மிக சிறப்போடும் செய்து வரும் அதிரைநியூஸ் வலைதள நிறுவனர்களுக்கு என் பாராட்டுக்கள். உங்களின் இந்த சேவை என்றென்றும் சிறக்க வாழ்த்துகள். இந்த நடு நிலையை எப்போதும் கடைபிடித்தாள் நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம்.

    ஊர் நலனுக்காக போட்டிபோட்டுகொண்டு சேவையில் ஈடுபடும் அனைத்து நல் உள்ளங்களையும் நாம் ஆதரித்ப்போம் பாராட்டுவோம் வாழ்த்துவோம்.

    இப்படிக்கு

    அதிரை M. அல்மாஸ் என்கிற N. முகமது மாலிக்
    அபுதாபி

    ReplyDelete
  25. //அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நடத்திய கூட்டங்களில் கலந்துகொண்டு உண்மையும் அறிந்த பிறகு, ஒரு தனிப்பட்ட கட்சி , அதே சமயத்தில் தனிப்பட்டு ,செய்வதாகவோ அல்லது தாங்கள் செய்வது போல் நடித்தோ நாங்களும் செய்கிறோம் என்று மக்களை குழப்பி வந்த வாய்ப்புகளை இதிலும் நீனா நானா என்று இழுபறியில் கொண்டு போகும் செயலாகிய அந்த செய்தியை வெளியிட்டது நல்லதல்ல.//

    இவாறேல்லாம் எழுதுவதுதான் நல்லதல்ல. எதோ மிரட்டுவதுபோல் உள்ளது.

    //காரணம் ஆரம்ப நிலை அதிரை நியூசுக்கு நல்லாவே தெரியும் போது ஆதாரமில்லாத இது நிச்சயம் போட்டிச் செயல் என்று தெரிந்த பிறகு இதை புறக்கணிப்பதே மேல்.//

    உங்களுடைய இடத்தில் இப்படி எழுதும் தாங்கள் அவைகள் நிலையில் சிந்தித்து எழுதுங்கள் உங்களூக்கே உண்மைதெரியும். பத்திரிகை தருமம் அறிந்து எதையும் எழுதவேண்டும். பத்திரிக்கைக் காரனுக்கு எல்லோரும் ஒன்றுதான். எந்தப் பக்கமும் அவர்கள் சாரமாட்டார்கள். நடப்புகளை எழுதினால் அவர்கள் நடிக்கிராகள். பூதக்கண்ணாடி வைத்து தேடிப்பிடித்து பாதகமாக எழுது என்பது எந்த அகராதியில் ஞாயமாக எழுதப்பட்டு உள்ளது ?

    வேண்டாம் காழ்புணர்வு. எல்லோருமே நல்லவனாகத்தான் வாழ ஆசைப்படுகிறார்கள். எல்லோருமே தன கட்சி வளர்க்கத்தான் ஆசைப்படுகிறார்கள். சேவையில் போட்டிப்போட்டு வெள்ளட்டடுமே !

    //எல்லா செய்தியையும் போடலாம் ஆனால் ஊர் நலனுக்கு உலை வைக்கும் செய்தியை புறக்கணிப்பதே சேவை ஊடகத்துக்கு அழகு!//

    இந்த செய்தியை போட்டால் ஊர் நலன் பாதிக்கும் என்பதும் மிரட்டல்போல் அல்லவா இருக்கிறது.

    இதனால் தண்ணீர் வருவது நிறுத்திவிடுவார்கள் என்பது போலவும் அல்லது நாங்கள் முயற்சி செய்யமாட்டோம் என்பதுபோல் அல்லவா இருக்கிறது. எதையாயும் மனதில் பட்டதை எழுதிவிடுவது நல்லதாகுமோ ?

    //
    உண்மையிலேயே ஊர் நலனுக்காக துவங்கிய ஊடகம் ,ஊரின் சேவை தடைபடும் வகையில் அமையும் என அறிந்ததை தவிர்ப்பதே மேல்.//

    இது என்ன அரசியல் புரியவில்லையே ? தாங்கள்மட்டும் நல்லவர்கள். நல்லது மட்டும் செய்வீர்கள் மற்றவர்கள் கெடுதல் செய்வதற்கே உள்ளவர்கள் என்பதுபோல் உள்ளதே ! தாங்களால் சேவைகள் செய்ய முடியவில்லை என்றால் முடிவுகள் உங்கள் கையில். யாரையும் மனம் நோகடிக்கும்படி எழுத வேண்டாம்.

    ReplyDelete
  26. முதலில் கருத்திட்ட சகோதரரின் கருத்தை தெளீவாக வாசித்தால் சகோதரர் அன்ஸ் அவர்கள் இவ்வளவு விளக்கம் கேட்க தேவை இருக்காது. முதலில் கருத்திட்ட மு.செ, மு கருத்தை வரவேற்கிறேன். கண்ண்டிப்புக்கும் - மிரட்டல் பயமுறுத்தலுக்கும் வித்தியாசம் தெரியாமல் கருத்திட்டு இருப்பது தமிழ் அறியாமையும் குறிக்கிறது.

    ReplyDelete
  27. உள்ளூர் செய்திகளையும் மற்ற செய்திகளையும் உடனுக்குடன் பதிந்து எங்களைபோல் வெளிநாட்டில் வாழும் அதிரையர்களுக்கு வழங்கி வருகிறீர்கள். பாராட்டிற்குரியவை. அதுபோல் சமீபத்தில் குலத்திற்கு தண்ணீர் கொண்டு வர பாடுபட்டு வரும் பேரூர்ராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் சிறப்பான பணியையும் தளத்தில் பதிந்து இருந்தீர்கள்.அது போல AIADMK செய்து வரும் நலப்பணிகளையும் பதிந்துள்ளீர்கள். இதில் தவறு ஒன்றும் இல்லையே

    ReplyDelete
  28. பாரபட்சமில்லாத எல்லா செய்தியும் தாங்கி வரும் அதிரை நியூஸை பாராட்டுகிறேன் அதே சமயம் அதிமுக செய்தியை இந்த நேரத்தில் பதிவதால் குழப்பமே வரும். சேர்மன் கணீடிப்பதாகதான் சொன்னார், ஆனால் ந்நிங்களோ யாருக்கும் அடிபனிய மாட்டொம் என்கிறீர். ஏன் இந்த அவசரம்

    ReplyDelete
  29. கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரை நியூஸ் தொடர்பு கொண்டு நமதூர் பட்டுகோட்டை ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் ஆலை அரசு அனுமதி இல்லாமல் இயங்கிகிறது என்று ஆதாரத்துடன் கூறிய பொழுது எந்த நடுநிலைமையோடு தங்கள் தளத்தில் பதிய யோசித்திர்கள்? பயந்திர்களா?

    ReplyDelete
  30. அன்புள்ள நடத்துனர் சேக்கனா நிஜாம் ஆசிரியருக்கு,
    மற்றும் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

    இந்த தலைப்பில் "எந்த ஒரு நபரின் மிரட்டலுக்கும் அடிபணியாது" என்று போட்டதால் வாசகர் கொதித்து விட்டதாக உணர்கிறேன். சேர்மன் காணொளியில் கண்டிக்கத்தக்கது, வன்மையாக கண்டிக்கத்தது என்று தானே சொல்கிறார். போனில் அல்லது ஆள் மூலம் மிரட்டினாரா என்பதை தெரியப்படுத்தினால் அதிரை நியூஸ் வாசகர்களுக்கும் குழப்பம் இல்லாமல் இருக்கும். (நானும் உங்களோடு இணைந்து கொள்வேன்)

    அது போல ஒரு சகோதரர் என் வேண்டுதலையே மிரட்டுவதாக எழுதி இருந்தார். முகவரி இல்லாதமைக்கு என்னால் விளக்க இயலாது.

    ReplyDelete
  31. அதிரை நியூஸ் ஊடக வரம்பை மீறவில்லை .
    அதிரை போஸ்ட் ..நியூசை காப்பி பேஸ்ட் தான் செய்தது .
    அதனை விசம பிரச்சாரம் என்று குறிப்பிட்டது .
    எந்த வகையில் நியாயம் .

    ReplyDelete
  32. karuthu kural21 December 2013 22:12
    //கடந்த சில மாதங்களுக்கு முன் அதிரை நியூஸ் தொடர்பு கொண்டு நமதூர் பட்டுகோட்டை ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் ஆலை அரசு அனுமதி இல்லாமல் இயங்கிகிறது என்று ஆதாரத்துடன் கூறிய பொழுது எந்த நடுநிலைமையோடு தங்கள் தளத்தில் பதிய யோசித்திர்கள்? பயந்திர்களா?//





    பட்டுகோட்டை ரோட்டில் அமைந்துள்ள குடிநீர் ஆலை எல்ல அனுமதியும் பெற்று இயங்கி வருகின்றது அது சம்பந்தமான துறை அதிகாரிகளுக்கு இது நன்றாகவே தெரியும் உங்களை போன்ற முகம் இல்லாத குரல் மட்டும் உள்ள வர்களுக்கு தெரியாது

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாக கூறினீர்கள்...

      ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு அதிரை நியூஸ் என்றென்றும் துணை போகாது

      Delete
  33. அதிரை நியூஸ் இன் பனி மகாத்தானது தங்களின் பனி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  34. அதிரை நியூஸ் -ன் பனி மகாத்தானது தங்களின் பனி மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.

    என்றும் தாங்கள் வழக்கம் போல் பணி தொடரவும்.

    ஆக்கங்கள் போட்டப்பின் நீக்கும் நிகழ்வுகள் நடவாமல் இருப்பது நலம். அதனால் எதோ ஒரு பக்கம் சார்பு என்பதாக எழும் எண்ணங்கள் தவிற்கலாம் பின்னோட்டம் தடம் பிரண்டு போகும்போது தாங்கள் பின்னோட்டம் தொடராமல் நிர்வகிப்பது நல்ல முறை. செய்திகள் நடப்பவைகள், நடந்தவைகள். அவைகள் அனைவரும் தெரிவதில் தவரில்லை. அதற்காக் குழப்பம் விளைவிக்கும் செய்தி என்று காரணம் எழலாம். அதுதான் தாங்கள் போன்றவர்களுக்கு முன்பே தெரிந்துவிடுமே. எல்லா யோசனைகளையும் அலசி முடிவெடுப்பது தாங்களே.

    ReplyDelete
  35. இதுகால் வரை வந்த செய்திகள் நடந்தவைகளைப் பார்த்தால், கண்டனம் என்றால் என்ன என்பதே புரியவில்லை. யாரை யார் கண்டிக்க வேண்டும் என்பதும் புரியவில்லை. சொல்லிவிட்டோம் என்பதை பிடிவாதமாக பிடித்துக்கொண்டிருந்தால் அது கனடனமா ? பயமுறுத்தலுக்கு கண்டிக்கின்றோம் என்று சொல்வதா ? அல்லது நாட்டு நடப்பை போட்டால் கண்டனமா ? எப்படி புரிந்துக் கொள்வது ? சுந்தந்திரமாக இல்லாமல் யாருடைக் கட்டுப்பாட்டில் யாரையும் நிறுத்த கண்டனமா ?
    கண்டனம் இன்று மதிப்பிழந்தது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.