.

Pages

Saturday, December 28, 2013

முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டிற்கு சென்ற வாகனம் டயர் வெடித்து கவிழ்ந்தது !

முத்துப்பேட்டையிலிருந்து திருச்சியில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கும் இளம்பிறை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்ற வாகனம் விபத்திற்குள்ளானது.
முத்துப்பேட்டையிலிருந்து இளம்பிறை மாநாட்டிற்கு சென்ற கொண்டிருந்த வாகனம் ஒரத்தநாடு அருகே உள்ள புலவன்காடு கிராமத்தை கடந்து சென்ற போது வாகனத்தின் முன் டயர் வெடித்ததால் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் பயணம் மேற்கொண்ட சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனத்தின் உள்ளே சிக்கி கொண்டவர்களை வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து மீட்டனர். காயங்கள் ஏற்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் இந்தபகுதி சிறிது நேரம் பரப்பரப்பாக காணப்பட்டன.

களத்திலிருந்து அதிரை நியூஸ் சாகுல் ஹமீது

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று நினைக்கிறேன் அல்லாஹு பாதுக்காபனாக ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.