.

Pages

Friday, December 6, 2013

த.மு.மு.க வாகனங்களை வழிமறித்து தாக்கியதை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பை வழங்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாப்ரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று [ 06-12-2013 ] மதியம் 2 மணியளவில் நகர கிளையின் சார்பாக 17 வேன்களில் 400 க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்.

அதே போல் த.மு.மு.க / மமக மதுக்கூர் கிளையின் சார்பாக  ஒரு வேனில் பெண்கள் உட்பட மொத்தம் 5 வேன்களில் தஞ்சைக்கு புறப்பட்டுச்சென்றனர். இந்த வாகனங்கள் பாப்பாநாடு அருகே கடந்து செல்ல முற்படும் போது வாகனத்தை இடைமறித்த இந்து முன்னணியினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வாகனத்தின் கண்ணாடிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இதைக்கண்டித்து மதுக்கூர் மற்றும் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு ஆகிய இரு இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. தஞ்சையில் நடைபெற உள்ள மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வாகனத்தில் சென்ற அதிரை நகர த.மு.மு.க / ம.ம.க வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மணிக்குண்டு மக்கள் வெள்ளத்தில் ஸதம்பித்தது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. குற்றவாளியை கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டோர் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை டி.எஸ்.பி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுவார் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் போலீசார் பாதுகாப்போடு தஞ்சைக்கு புறப்பட்டுச்சென்றனர். இதனால் இந்த பகுதி முழுதும் சில மணி நேரங்கள் பரபரப்பாக காணப்பட்டது.




4 comments:

  1. மாஷா'அல்லாஹ்'இதுதான் ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிக்கொள்ளுங்கள் அது எங்கு நடந்தாலும்' அல்லாஹ்வின்'இல்லத்திற்காக நாம் நடத்தியதற்காக நிதர்தியான சான்று pkt மணிகூண்டில் நடந்தது 'அல்லாஹ்'மறுமையில் கலந்து கொண்டோர்களுக்கு நிச்சயம் நற்கூலி உண்டு

    ReplyDelete
  2. அதிரை நீயுஸ் இனைய தளம் லாரன் ஸ்கூல் வேன்களையும் சேர்த்து கணக்கு எடுத்துவிட்டார்கள் போலும் அதிரையில் இருந்து சென்ற வேன் 8 தஞ்சையில் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 500 க்கு குறைவானவர்கள் தான் கலந்துக்கொண்டார்கள்
    அதிரை நீயுஸ் இனைய தளம் நடுநிiலையை விட்டு தடுமாறவேண்டாம்

    ReplyDelete
  3. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆர்பாட்டம் நடந்தால் அதற்கு 10 லட்சம், 15 லட்சம் பேர் வருவார்களாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் மற்ற இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியதில் 17 வேன்களில் மக்கள் கலந்து கொண்டால் அதுக்கு இல்லை என்பார்களாம். msm நகர் அஷ்ரப் காக 8 வேன்களை மட்டும் பார்த்ததற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.