.

Pages

Thursday, December 5, 2013

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணியில் அதிரையர் பங்கேற்பு [ புகைப்படங்கள் ]

மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பட்டுக்கோட்டையில் கடந்த [ 03-12-2013 ] அன்று விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்த பேரணி பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து புறப்பட்டு பழனியப்பன்தெரு, மணிக்கூண்டு, பெரியத்தெரு வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. பேரணியில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். கருவுற்ற தாய்மார்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது. 

இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அதிரை எ.முகம்மது ராவுத்தர் உட்பட ஏனைய நிர்வாகிகள் மற்றும் அதிரை பேச இயலாத - காது கேளாத நலச்சங்கத்தின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.







1 comment:

  1. 'செல்வத்தில் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்திலெல்லாம் தலை'
    என்ற வள்ளுவரின் கூற்று இவர்களின் காதுகளையும் எட்ட வேண்டும் . சிறு வயதில் சுவற்றில் எங்கோ கரியில் எழுதிய ஞாபகம்............ N காது K காது என்று.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.