.

Pages

Sunday, December 1, 2013

ஆட்கொல்லி நோய்க்கு உன்னை ஆட்கொள்ளாதே !?

உலக எயிட்ஸ் தினமான டிசம்பர் 1 தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு தரும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. எயிட்ஸ் நோயினால் இறந்தோரை நினைவு கூறவும், எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நோய் பரவலை தடுக்க வேண்டும் என்ற சமூக அக்கறையின்பால் தனது பேனாவை ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து பல படைப்புகளை கவிதையின் மூலம் வெளிப்படுத்தி வரும் அதிரையின் பிரபல கவிஞர் கவியன்பன் அபுல் கலாம் அவர்களும், தனது இனிய குரலால் அனைவரின் பார்வையையும் தனது பக்கம் இழுத்து வரும் அதிரை ஜாஃபர் அவர்களும் இணைந்து உயிர்க்கொல்லி நோய் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள காணொளியை உங்களின் பார்வைக்காக இதோ...


புண்ணைத் தேடிப் புறப்படும் ஈயாய்த் (தீயப்)
பெண்ணைத் தேடிப் பெருவினை நோயாய்க்
கண்ணைக் கொன்றக் கருமையாய் வாழ்க்கை
மண்ணி லுள்ளோர் மதித்திடாப் போக்காய்

அற்ப இன்பம் அடைந்திடும் மோகம்
சொற்ப வாழ்வில் சுருங்கிடும் தேகம்
விற்கும் மேனி விளைத்திடும் மோசம்
கற்பைப் பேணாக் கழிசடை வாசம்

மங்கை யான மனைவியே மாண்பாம்
நங்கை இன்பம் நலவுடன் காண்பாய்
எங்கோ சென்று இழப்பது ஏனோ?
பங்கம் கிட்டும் பழக்கமும் வீணே!

தாயும் ஈன்றாள் தரணியில் மேவ
நோயும் கொண்டால் நொடியினில் சாவு
வாயில் புண்ணை வளர்க்குமாட் கொல்லி
பாயில் தூங்கிப் புலம்புவாய்ச் சொல்லி

நாணம் கொண்டு நல்முடன் ஈமான்
பேணச் செய்தால் பெருகிடும் சீமான்
காணும் செல்வம் கணக்கிலா ஏட்டில்
வேணும் அச்சம் விரைவுடன் நாட்டில்!

பாடல் பாடியவர் : அதிரை ஜாஃபர்
பாடல் இயற்றியவர் : கவியன்பன் அபுல் கலாம்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி..

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  2. மிக்க நன்றி மச்சான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.