.

Pages

Wednesday, April 30, 2014

காட்டுப்பள்ளி கந்தூரி - நேரடி ரிப்போர்ட் !

அதிரையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி மற்றும் கடற்கரைதெரு தர்ஹாக்களில் வருடந்தோறும் கந்தூரி விழா எடுத்துவருவது வழக்கமாக இருந்துவருகிறது. இவற்றை அதிரையில் வாழுகின்ற ஒரு சாரார் ஆதரிப்பதும் மற்றொரு சாரார் கடுமையாக எதிர்த்து வருவதுமாக இருக்கும். கடந்த 500 வருடங்களுக்கும் மேலாக அதிரையில் கொண்டாடப்பட்டு வரும் இந்த விழாவை அதிரையில் வாழும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.

கடந்த சில வருடங்களாக ஊரில் நடக்கும் கந்தூரி விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இயங்கிவரும் தவ்ஹீத் அமைப்புகள் அவ்வப்போது துண்டு பிரசுரங்களும், தெருமுனை பிராசாரங்களும், பொதுக்கூட்டங்கள், கந்தூரி விழாவிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டைகளும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குதல், கந்தூரி விழாவின்போது விநியோகிக்கும் மின்சாரத்தை தடை செய்யாமலிருக்க மின்சார வாரியத்தின் கவனத்துக்கு எடுத்துச்செல்தல் உள்ளிட்ட எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவிக்கவும் தவறியதில்லை.

இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காட்டுப்பள்ளி தர்ஹாவின் கந்தூரி ஊர்வலம் இன்று மாலை 4.30 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹாவிலிருந்து புறப்பட்டு சென்றது. இதில் கடந்த முறை 15 க்கும் மேற்பட்ட உருப்படிகளுடன் நகரை வலம்வந்த ஊர்வலம் இம்முறை இரண்டே இரண்டு உருப்படியோடு சென்றது.

பட்டுக்கோட்டையில் நேற்று கோட்டாசியர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதானக்கூட்டத்தில் கந்தூரி கமிட்டியினரும், ADT அமைப்பினரும் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நடுத்தெரு, புதுமனைதெரு, சிஎம்பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லாது என இருதரப்பினரும் ஏற்றுகொண்ட தீர்மானத்தின்படி இந்த பகுதிகளுக்கு இம்முறை செல்லவில்லை.

கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நகரில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படாமல் இருந்தது. ஊர்வலத்தின் போது எவ்வித அசம்பாவிதமங்களும் நடைபெறாமல் தடுக்க பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்கள்.


26 comments:

  1. Insha allah ipudiya konjam konjamaka koraiya allah rahmath seivanaka ameen.hajrath sheik nasurudeen ooliulla avarkalukaka Allah idam thuva seiyalam annal ipudi ooruvalam yaduka kudathu.allah itha thaadai seikiran Allahku maraka saiyal padakudathu Allah nam ooruil vaalum islamiya perumakkala allah pathukapanaga.

    ReplyDelete
  2. சைலன்ஸ் என்பததையே சப்த்தமாக தான் சொல்ல வேண்டி இருக்கு! பாவம் இந்த அறியாமை மூடர் கூட்டதுக்கு எனது இறைவனே சிந்திக்கும் புத்தியைக் கொடு கல்லுக்கு சந்தணம் பூசும் அவனுக்கு!,,,,,என்நோடு அவனும் சுவர்க்க காற்றை சுவாசிக்கணும்,

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாத்தின் பெயரால்...

    நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? இதோ ஒரு கணம் சிந்திப்பீர்!

    அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்

    அங்கே தேர் திருவிழா : இங்கே கந்தூரி

    அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்

    அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு

    அங்கே சிலைக்கு பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி

    அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள் ,,,,,,,,,, இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய மக்களைக் காப்பானாக!

    ReplyDelete
  4. இன்ஷாஅல்லாஹ் அடுத்தவருடம் இன்னும் குறைந்துவிடும்

    ReplyDelete
  5. ஆல் முஹல்லா ஆரம்பித்தன் நோக்கம் என்ன? அதன் தலைவர் கந்தூரிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார் ஆல் முஹல்லா அதிரையில் உள்ள அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் மற்றும் ஊர் நலனுக்கு பாடுபடும் என்று நம்பி வெளிநாடுகளில் உள்ள நம்முடைய சகோதரர்கள் ஆல் முஹல்லாவிற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்கிறார்கள் இங்குள்ள ஆல் முஹல்லா நிர்வாகிகளோ ஒவ்வொரு முஹல்லாவிற்கும் சென்று தம்ரூட் முட்டை புரோட்ட போன்றவைகளை சாப்பிட்டு விட்டு களைந்துவிடுகிறார்கள்

    ஆல் முஹல்லா ஆரம்பித்தன் நோக்கத்தை இப்போ புரிகிறதா? இனிமேலும் இவர்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை செலவு செய்யவேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. தலைவர் என்பவர் சமுதாயத்தை அரவணைத்து செல்பவராக தான் இருக்க வேண்டும்

      அது சரி உங்க இயக்கத்தின் தலைவர்கள் வெளிநாடு நிதிலிருந்து சொகுசு வாகனத்தில் உலா வருகிறார் இதற்க்கு தம்ரூட் முட்டை புரோட்டா பரவா இல்லையே!

      Delete
    2. கந்தூரியை ஆதரிப்பவர்களின் பணத்தில் தம்ரூட் முட்டை புரோட்ட சாப்பிட்டால் நாங்கள் கேள்வி கேட்கமாட்டோம் கந்தூரியை எதிர்ப்பவர்களின் பணத்தில் தின்பதால் தான் நாங்கள் கேள்வி கேட்கிறோம்

      Delete
  6. ஆல் முஹல்லா ஆரம்பித்தன் நோக்கம் என்ன? அதன் தலைவர் கந்தூரிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கிறார் ஆல் முஹல்லா அதிரையில் உள்ள அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் மற்றும் ஊர் நலனுக்கு பாடுபடும் என்று நம்பி வெளிநாடுகளில் உள்ள நம்முடைய சகோதரர்கள் ஆல் முஹல்லாவிற்காக தன்னுடைய பணத்தை செலவு செய்கிறார்கள் இங்குள்ள ஆல் முஹல்லா நிர்வாகிகளோ ஒவ்வொரு முஹல்லாவிற்கும் சென்று தம்ரூட் முட்டை புரோட்ட போன்றவைகளை சாப்பிட்டு விட்டு களைந்துவிடுகிறார்கள்

    ஆல் முஹல்லா ஆரம்பித்தன் நோக்கத்தை இப்போ புரிகிறதா? இனிமேலும் இவர்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை செலவு செய்யவேண்டாம்

    ReplyDelete
  7. படைத்தவன் அல்லாஹ்வை எந்த வித கலப்பும் இல்லாமல் வணங்குவதை விட்டு விட்டு,முகைதீனையும்,சாகுல் ஹமீதையும்,ஹாஜா அலாவுதீனையும்,நஸ்ருததீனையும்,ராவுத்தர் ஷா,இப்ராஹிம் ஷா வையும் இணையாக்கும் மக்களே திருந்தமாட்டீர்களா?சொர்க்கத்துக்கு வாருங்கள் என அல்லாஹ் அழைக்கிறான்,நீங்களோ எங்களுக்கு நரகம்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்களே?சிந்தியுங்கள்.

    ReplyDelete
  8. தாருத் தவ்ஹீத் அமைப்புக்கு உளம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஊரில் சமுதாய மக்களை A , B , C , D , E என்று பிரித்து வீட்டு மனைஇருந்து திருமண வரை பாகு பாடு - வேறு பாடு இப்போ வெளிப்படையாக கூறியதற்கு பாராட்டோ?

      Delete
  9. படைத்தவன் அல்லாஹ்வை எந்த வித கலப்பும் இல்லாமல் வணங்குவதை விட்டு விட்டு,முகைதீனையும்,சாகுல் ஹமீதையும்,ஹாஜா அலாவுதீனையும்,நஸ்ருததீனையும்,ராவுத்தர் ஷா,இப்ராஹிம் ஷா வையும் இணையாக்கும் மக்களே திருந்தமாட்டீர்களா?சொர்க்கத்துக்கு வாருங்கள் என அல்லாஹ் அழைக்கிறான்,நீங்களோ எங்களுக்கு நரகம்தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்களே?சிந்தியுங்கள்.

    Reply

    ReplyDelete
  10. This is ridiculous act that adirai tea party leader supporting sirk
    Most of of home town alim ignorant due to obey madhab masalas
    They go back to understand what Quran & authentic hadhis teach us to followed
    May Allah save us from hel fire
    I humble request all pls keep you & your family away from these kind of anti social elements

    ReplyDelete
  11. //இதில் கடந்த முறை 15 க்கும் மேற்பட்ட உருப்படிகளுடன் நகரை வலம்வந்த ஊர்வலம் இம்முறை இரண்டே இரண்டு உருப்படியோடு சென்றது.// Good Signal.

    //இதில் நடுத்தெரு, புதுமனைதெரு, சிஎம்பி லேன், ஆஸ்பத்திரி தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊர்வலம் செல்லாது என இருதரப்பினரும் ஏற்றுகொண்ட தீர்மானத்தின்படி இந்த பகுதிகளுக்கு இம்முறை செல்லவில்லை.//

    பாராட்டலாம்.

    அதே நேரம் இதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்குமென்று தோன்றவில்லை. ஊரின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி தெருக்கள் புறக்கணிப்பதால் ஏற்படும் பயனைவிட கீழத்தெரு, புதுத்தெரு வாசிகளும் தங்களின் தெருக்களுக்கு வரக்கூடாது என்று அடுத்த வருடமாவது தங்களை இணைத்துக் கொண்டால் ..........

    இந்த ஊர்வலம் மகிழங்கோட்டை அல்லது இராஜமடம் ஆகிய கிராமங்களுக்குத்தான் செல்ல நேரிடும்.

    ReplyDelete
    Replies
    1. சென்றாலும் வரவேற்பார்கள் அவர்கள் இதில் கலந்தும் கொள்கிறார்கள் அவர்கள் கொண்டு வந்தால் ........? சீண்ட வேண்டாம் !!

      Delete
    2. இதுபோன்ற பெரியவர்களின் வார்த்தைகளில்தான் ஊர் ஒற்றுமைப்படும். நல்ல முயற்சி.

      Delete
  12. இந்த மகான்கள் இறை நேசர்கள், இறைவனின் கட்டளைக்கு கீழ்படிந்து நம்ம பகுதிக்கு வந்து இஸ்லாம் மார்க்கத்தை பரப்பினார்கள். இவர்கள் வந்ததினால் நாம் எல்லோரும் இஸ்லாமியர்களாக ஆக்கப்பட்டோம்/மாற்றப்பட்டோம், இதுதான் உண்மை.

    இவர்களுக்கு தஞ்சாவூர் மன்னன் கணக்கில் அடங்கா நிலங்களை கொடுத்து அதன் விபரங்களை செப்பு தகட்டில் பட்டா போட்டு கொடுத்தான். காலப் போக்கில் அது சுரண்டப்பட்டு காணாமல் போய் விட்டது. இன்று நாம் சொகுசா வீடுகளை கட்டிக் கொண்டு ஜாலியாக இருக்கின்றோமே இதெல்லாம் யாருடைய நிலம்? 450 வருடங்களுக்கு முந்தைய புஸ்தகத்தை தூசி தட்டிவிட்டு பாருங்கள்.

    இந்த மகான்கள் இறந்தவுடன், அன்று இஸ்லாத்தை தழுவிய மக்கள், இவங்களை அடக்கம் செய்த இடத்தில் ஒரு கூடாரத்தை கட்டி எழுப்பிவிட்டார்கள், அது இன்று தர்கா என்று அழைக்கப்படுகிறது, இதுதான் உண்மை.

    அவர்களின் அடக்க நினைவு நாளாக கந்தூரியை அன்று ஆலிம்கள் நடத்தி வந்தார்கள், அனாச்சாரம் ஏதும் இல்லாமல் இருந்ததாக முதியோர்கள் கூறுகின்றார்கள், இன்று என்ன நடக்குது? வழக்கத்துக்கு மாறாக நடக்குது, இதனால் ஒரு சில சாரார்களுக்கு இது விருப்பம் இல்லை. இந்த கந்தூரியை தடுத்து நிறுத்த அரும்பாடு பட்டும் முடியாமல் போய் விடுகிறது, காரணம் “அவர் சொல்லி நான் கேட்பதா” என்று உருவாகிவிடுகிறது.

    இந்த விஷயத்த்தை நோண்டாமல் இருந்திருந்தால் படிப் படியாக குறைந்து இருக்கும். இந்த கந்தூரியை ஆதரிப்பவனுக்கும் விபரம் தெரிய வில்லை, எதிர்ப்பவனுக்கும் விபரம் தெரியவில்லை, விபரம் தெரிந்தவர்கள் ஒதுங்கி கொண்டார்கள்.

    திருடனா பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது.

    அல்லாஹ் நாட வேண்டும். ஆமீன்.

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    ஆவணத்து குதிரையை யாரு ஓட்டிகிட்டு போனது. காலேஜ் ரோட்டில் பார்த்தேனே.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
    Replies
    1. காக்கா,அன்று முதல் இன்று வரை ஆவணத்து குதிரைதானா ?

      Delete
    2. அதானே! அது என்னாண்டு தெரியலே தம்பி, நான் சின்ன பிள்ளையாக இருக்கும்போது நமதூர் கல்யாணத்தில் ஆடுனதை என்னால் மறக்க முடியாது.

      Delete
  14. ஆல் முஹல்லா ஆரம்பித்தன் நோக்கத்தை இப்போ புரிகிறதா? இனிமேலும் இவர்களுக்கு தங்களுடைய பொருளாதாரத்தை செலவு செய்யவேண்டாம்?

    ReplyDelete
    Replies
    1. அதிரை அனைத்து மகல்லா கூட்டமைப்பு என்பது அதிரையை முழுவதும் வஹ்ஹாபி மார்க்கம் ஆக்கிவிடப் போட்ட தந்திரம் பலத்தில் இதுவும் ஒன்று என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது என்று நினைக்க வேண்டாம். ADT என்பதும் அதன் வகையைச் சார்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சூழ்ச்சிக் காரர்களுகெல்லாம் மேலானவன் அல்லாஹ் என்பதை ஏனோ சூழ்ச்சிக்காரர்கள் ஏற்ப்பதில்லை !

      Delete
  15. insha aiia next year innum kurainthu vidum

    ReplyDelete
  16. Melatheruvil yaru varthachanai vangamal kalyanam seigira athe sollunga mudalili ?? Oru Kuttampottu anaivariaiyum kelungal yaru yaru varathachanai vanguna yaru vangavillai ....Allahuvirkkum avanga PJkkum bayanthu sollanum ...ennedral PJ thaane mudalil apparamthaan Allah (evargalukku mattum ) kuttathil 100 peru eruntha athil 10 peru eruppanga vangatha alunga ...meethi ellorum ayokkiya paiyangal,orai yemathum poiengal..appadiyea seithalum naan vangalai enga umma vangunanga endru soldrangal ........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.