தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலுவுக்கு ஆதரவு தரக்கோரி அவராது மகனும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமாகிய இன்று மதியம் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் அவர்களின் இல்லத்திற்கு வருகைதந்து சந்தித்து பேசினார். சந்திப்பின் போது திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், கடற்கரைதெரு, புதுத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு ஆகிய தெருவை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர்.
சந்திப்பு குறித்து பேரூராட்சி தலைவர் அஸ்லம் நம்மிடம் கூறுகையில்...
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், சந்திப்பின் போது திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் பணியை விரைந்து முடித்து தர தங்களின் ஒத்துழைப்பு தேவை என தான் கேட்டுக்கொண்டதாக நம்மிடம் கூறினார்.
தேர்தல் முடிவும் வரை இந்த மாதிரி சந்திப்புகள் தொடரும். இப்போ ரயில் பிரச்னை முக்கியமா ? தண்ணீர் பிரச்னை முக்கியமா?
ReplyDeleteநீங்க வெற்றிபெற்றாலும் எந்த பிரச்சனையும் தீர்க்க போறது இல்லை. அரசியல் வாதிகளை மக்கள் திருடர் போல தான் பார்கிறார்கள்.
ஒருத்தன் வேலை செய்திட்டு கொள்ளை அடிக்கிறான் இன்னொருத்தன் வேலை செய்யாமல் கொள்ளை அடிக்கிறான் இது தான் உண்மையும் கூட.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் யாருக்கு ஓட்டு போடணும் என்று.