.

Pages

Saturday, April 19, 2014

அதிரையில் T-20 கிரிக்கெட் தொடர் போட்டி கோலாகலமாக துவங்கியது !

அதிரை பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) நடத்தும் மாவட்ட அளவிலான மாபெரும் T-20 கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல்நாள் ஆட்டம் இன்று காலை ஷிபா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள கிரானி மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

தஞ்சை கிரிக்கெட் அசோசியேஷனின் மேற்பார்வையில் நடைபெறும் இந்த தொடர்போட்டியில் தமிழக அளவில் தலைசிறந்த 20 அணிகள் மோத இருப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய முதல் ஆட்டத்தில் அருண் நெட்ஸ் தஞ்சை அணினரும், ABCC அதிரை அணியினரும் விளையாடினர். இதில் தஞ்சை அருண் நெட்ஸ் அணியினர் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். முன்னதாக டாஸ் வென்ற ABCC அணியினர் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட தஞ்சை கிரிக்கெட் அசோசியேஷன் துணைதலைவர் சீனிவாசன், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைபள்ளியின் முன்னாள் விளையாட்டு ஆசிரியர் ராமச்சந்திரன், அதிரையின் முக்கியஸ்தர்கள் இப்ராகிம், பாருக், AFCC மேனேஜர் ஹுசைன், சேக்தம்பி, அனஸ் ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார்கள்.

நிகழ்சிகள் அனைத்தையும் SIS முஹம்மது அழகாக தொகுத்து வழங்கினார். இன்றைய முதல் ஆட்டத்தை காண ஏராளமான கிரிக்கெட் பிரியர்கள் வருகைதந்து ரசித்தனர்.

செய்தி மற்றும் புகைப்படங்கள் :
இர்ஃபான் ( அதிரை தென்றல் )








1 comment:

  1. Rompa mukkeyamana thakaval
    pathevukku nanre
    thakavalukku nanre

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.