.

Pages

Thursday, April 24, 2014

அதிரையில் நடக்கும் வாக்கு பதிவு ! நேரடி ரிப்போர்ட் !!



அதிரையில் இன்று அமைதியாக வாக்கு பதிவு துவங்கியது. காலை 7 மணி முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். அதிரையில் செயல்படக்கூடிய முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், ஜமாஅத் நிர்வாகிகள் வாக்கு சாவடிக்கு வந்து வாக்குகளை பதிந்து வருகின்றனர்.

வாக்கு பதிவை முன்னிட்டு இன்று அதிரையில் உள்ள பெரும்பாலான வர்த்தக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பதற்றமானவை என கருதப்பட்ட வாக்குசாவடிகளில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலகர்கள் பகுதி முழுதும் ரோந்து வருகின்றனர்.

இன்றைய பகல் நிலவரப்படி பதற்றமானவை என கருதப்பட்ட வாக்கு சாவடிகளில் எந்தவொரு அசம்பாவிதமும் இதுவரையில் நடைபெற வில்லை. அதிரையை பொறுத்தவரை 70 முதல் 85 சதவீதம் வரை வாக்கு பதிவு நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர் டிஆர் பாலு வருகை :
தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. டிஆர் பாலு அதிரையில் நடைபெற்று வரும் வாக்கு பதிவை இன்று காலை பார்வையிட்டார். அவரோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை, நகர செயலாளர் இராம. குணசேகரன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.








10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தேர்தல் அறுவடை செய்ய வேட்பாளார் வந்துட்டார் ஆனால் இனி அடுத்து 2 ஆண்டில் இதே கூத்து மக்கள் பார்க்கலாம்.

    மக்கள் பிரதிநிதிகள் ஓட்டு போட வருவதால் கப் - பை மறைக்க அரசு அலுவகத்தை சுற்றி கிரிமி நாசினி (பூச்சி மருந்து ) போடப்பட்டுள்ளது.

    பள்ளிக் குழந்தைகள் - ஆசிரியர்கள் -பொது மக்கள் இந்த கப் அனுபவவித்து வருவதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?

    ReplyDelete
  3. 34 ஆண்டுகட்குப் பின்னர் இன்று இதோ வாக்குப்பதிவு செய்து விட்டு ஜனநாயக உரிமையை நிலை நாட்டிய மாபெரும் மட்டிலா மகிழ்ச்சியில் இருக்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ். அதுவும் தஹஜ்ஜத் தொழுது விட்டு, நல்லாட்சி அமைய வேண்டும் என்ற அவாவுடனும் துஆவுடனும்.. அகரம் படித்தப் பள்ளியில் அழுத்தி வைத்தேன் வாக்கை; அல்லாஹ் நாடினால் மாற்றுவான் அரசியல் போக்கை!

    ReplyDelete
  4. அகரம் பயின்ற பள்ளியிலே
    *********அழுத்தி வைத்தேன் வாக்கினையே
    சிகரம் போலத் தெரிகின்ற
    ************சிறுபான் மையோர் வாக்குகளே
    நிகரே இல்லா வெற்றிகளை
    ************நிலையாய்க் காட்டி நிற்பதனால்
    பகரம் செய்வார் வெல்பவரும்
    *********படைத்தோன் அருள்வான் உறுதியாக!

    குறையைச் சுட்டும் விரலில்தான்
    ************குறியாய் இட்டக் கறைதானே
    கறையாய் நிற்கும் அவலங்கள்
    **********களையச் செய்யும் கறைதானே
    இறைவன் நாட்டம் விடுப்பினிலே
    *********இந்த வாய்ப்பைப் பெற்றதனால்
    நிறைவாய் மகிழ்ச்சி என்மனத்தில்
    *********நிலையாய்க் கண்டேன்; வாக்களித்தே!

    ReplyDelete
  5. நம் மக்கள் அதிகாலைத் தொட்டே வாக்கு அளிக்க தாயாரானார்கள். மதியம் வெயிலின் அகோரம் அதிகமாக இருந்ததால் தொய்வு ஏற்பட்டு தற்போது பர பரப்பாக இருக்குது, எல்லோரின் எதிர்பார்ப்பு தொண்ணூறு சதவிகிதம் பதிவாகும்.

    ReplyDelete
  6. இமயமலையே இடிந்த போதும் பரங்கி மலைகள் பறந்த போதும் அரசியல் வாதிகள் நம்மை மறந்த போதும் ஜனநாயகக் கடமையை மறக்காமல் செவ்வனே நிறைவேற்றி இறைவனை தொழுது ஏக்கத்தோடு உங்கள் வாக்கினை நிறைவேற்றிய கலாம் காக்கா வாழ்த்துக்கள் உங்கள் பிரார்த்தனையுடன் கூடிய எண்ணம் நிறைவேற.

    ReplyDelete
  7. திட்டமிட்டே பூத் ஸ்லிப் கொடுப்பதை மறைமுகமாக தடுத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக விழும் அடியாக இருக்க வேண்டும் நம் ஒவ்வொரு வாக்கும்.

    ReplyDelete
  8. சிறுபான்மையினர்களின் நிலைபாடு முன்கூட்டியே தெரிந்ததனாலோ என்னவோ நமதூர் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளிலும் பூத்ஸ்லிப் வினியோகிப்பதில் பாரபட்சம். சகோதரச் சண்டைகளிலேயே கவனத்தை செலுத்திய இயக்கங்கள் கவனம் செலுத்துமா இனியாவது?.

    ReplyDelete
  9. அனைவரின் தேர்வும் தீர்வும் நல்லா இருக்கவேண்டும், ஒருவிஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், மத்தியில் மோடி வந்தாலும், அவர் முஸ்லிம்களின் சின்ன விரலைகூட அசைக்க முடியாது. அவர் வரமாட்டார், சப்போஸ் வந்தால்! ஐந்து வருடத்தை தக்கவைத்துக் கொண்டு அடிக்கிறதை அடித்துக் கொண்டு இறங்கி விடுவார், இதுதான் நடக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.