இந்நிலையில் இந்நிறுவனம் தொடர்பாக கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்தி தொடர்பாக ஹபீபா ஹைப்பர் மால் நிறுவன உரிமையாளர் ஏ. ஒளரங்கசீப் அவர்கள் நம்மை தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் அளித்தார்.
இதில் கூறியிருப்பதாவது:-
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அதிரை பேருந்து நிலையப் பகுதியில் எங்கள் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எங்கள் நிறுவனத்தில் தரமான பொருட்களை மலிவான விலையில் வழங்கி வருவதால் அனைத்து தரப்பின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னை யார் என்று அறிமுகப்படுத்தி கொள்ள விரும்பாத நபர் ஒருவர் வாட்ஸ் அப்பில் எங்கள் நிறுவனம் குறித்து வதந்தியை பரப்பி வருகிறார். அதில் 'ஹபீபா சூப்பர் மார்க்கெட்டில் அதிக வியாபாரம் நடந்து வருவதாகவும்', 'பெண்கள் அதிகமாக செல்வதாகவும்'. 'தனியாக செல்லும் பெண்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லை' என்றும் கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறான தகவல். எங்கள் நிறுவனத்தின் பெரும்பாலான ஊழியர்கள் பெண்கள். சுமார் 20 பெண்கள் பணிபுரிகின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு எந்நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டரை ஆண்டுகளில் எங்கள் நிறுவனத்தில் எந்தவொரு தவறான நிகழ்வுகளும் நடைபெறவில்லை. பொருட்களை வாங்குவதற்காக எங்கள் நிறுவனத்திற்கு வருகை தரும் அனைத்து பெண்களும் பத்திரமாக பாதுகாப்பாக வழியனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஊழியர்களின் கனிவான பணிவிடை, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் கூடுதல் அக்கறை செலுத்தப்படுவதால் பெண்கள் உட்பட அனைவரும் மீண்டும் மீண்டும் எங்கள் நிறுவனத்திற்கு வந்து செல்கின்றனர்.
எங்கள் நிறுவனத்திற்கு வருகை தரும் பெண்களுக்கு பாதுகாப்பில் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு சம்பந்தபட்டோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிக்கொள்கிறோம்.
மேலும் எங்கள் நிறுவனம் குறித்த நிறை / குறைகளை எங்கள் அலுவலகத்தில் நேரடியாக தெரியப்படுத்தலாம். உங்களின் சிறந்த ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கிறோம்.
சில விசமிகளால் வாட்ஸ்அப்பில் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். இவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வழக்கம் போல் எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவையும், ஒத்துழைப்பையும், சிறந்த ஆலோசனைகளையும் வழங்கிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்றார்.
இப்படியெல்லாம் ஆதாரிமில்லாமல் ஒரு கருத்தை எழுதுவது பெரும் குற்றமாகும்.
ReplyDelete///////"சட்டத்தின் பிடியில் நடவடிக்கை வேண்டும்"////////
யார் மீது இப்படி ஆதாரமில்லாத செய்தியை பரப்புவர் மீதா? எழுதியவர் மீதா? அல்லது குற்றம் என்று நீங்கள் கூறும் செயலுக்கு காரணமாக இருந்த பெண் மீதா? ஒரு வேலை பணியாட்களோ மற்றவர்களோ தவறு செய்திருந்தால் அதற்கு பெண்ணும் உடந்தையாகத்தனே இருந்திருப்பாள்? பெண்கள் ஏன் வேலைக்கு வரவேண்டும்? இப்படி ஒரு ஸ்தாபனத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும்?.
எழுதியதுபோல் ஒரு சம்பவம் நடந்திருந்தால் இருவரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே தவிர ஸ்தாபணம் அல்ல, தனி நபர்கள் செய்யும் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் ஸ்தாபனம் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செய்திகளை பகிரங்கப்படுத்தப்படக்கூடாது. நாம் பிறருடைய குற்றங்களை மறைத்தால் அல்லாஹ் நாம் குற்றம் செய்யாமல் பாதுகாப்பான், நாம் அறியாமல் செய்து விடும் குற்றங்களை மறைப்பான்.
வாட்ஸ் அப் வந்த பிறகு அவதூறு பரப்புவது அதிகரித்துவிட்டது. அப்படி நடந்த சம்பவம் உண்மையெனில், இதுகுறித்து யார் புகாரளித்துள்ளாரோ, அவரிடம் தகவல் பெற்று சி.சி.டிவி கேமரா மூலம் சம்பவ நேரத்தை வைத்து கண்டு பிடித்து விடலாம்.
ReplyDeleteஇந்நிறுவனத்தின் உரிமையாளர் கூறியதுபோல் இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன் வருவதோடு , உரிமையாளர் தொடர்பில் உள்ள ஆதாரங்களையும் சமர்பித்தால் நன்று. ஏனென்றால் இதுபோன்று வீண் வதந்திகளை பரப்புபவர்களை கண்டெடுத்து களையெடுப்பதோடு, இனி இதுபோன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடாத வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
வாட்ஸ் அப் வாய்ஸ் ஏதோ தொழில் போட்டியில் பரப்பி விடப் பட்ட வதந்தியோ என சந்தேகிக்கத் தோன்றுகிறது.
வாட்ஸ் அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் பரவும் பல தகவல்கள் பொய்யானது மக்களே