.

Pages

Wednesday, April 15, 2015

மீன்பிடி தடைக்காலம் இன்று தொடக்கம் !

மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது. ஏப். 15 முதல் மே 29-ஆம் தேதி வரை விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலில் மீன்கள் பிடிக்கக் கூடாது என்றும், எக்காரணத்தைக் கொண்டும் இப்படகுகள் தங்குதளத்தினை விட்டு கடலுக்குள் செல்லக்கூடாது எனவும் ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 
தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் 1983-ன் படி, தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில், மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே மாதங்களில், மீன்வளத்தை பாதுகாத்து, உற்பத்தியை அதிகரிக்க வசதியாக ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 29-ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, மீன்பிடித் தடைக்காலம் இன்று ( புதன்கிழமை) தொடங்குகிறது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தடைக்காலம் தொடங்குவதால், மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    மீன் பிரியர்களுக்கு கொஞ்சம் அவஸ்த்தை.
    அப்படியே ஜஸ்ட் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.