அதிரை நியூஸ், ஆகஸ்ட் 18
இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒன்றாக டெல்லியிலும் வட நாட்டின் சில மாநிலங்களிலும் பட்டம் விடும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும். அப்படி பட்டம் பறக்க விட்ட நிகழ்ச்சி 2 சிறார்கள் ஒரு இளைஞர் என மூவரின் உயிரை பறித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் பட்டங்களை கார்களின் மேற்கூரை (Car Sun Roof) மேல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாஞ்சி கோயல் (வயது 3), ஹரி (வயது 4) மற்றும் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜஃபர் கான் (வயது 22) ஆகியோர் மாஞ்சா கயிறால் கழுத்தறுபட்டு இறந்துள்ளனர். போலீஸ்காரர் ஒருவரும் காயத்துடன் தப்பியுள்ளார்.
இதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு மொராதபாத்தில் 5 வயது சிறுவனும் 2014 ஆம் ஆண்டு 4 வயது சிறுமியும் மாஞ்சா கயிறால் கொல்லப்பட்டுள்ளனர்.
இரக்கமற்ற பாவிகளால் கண்ணாடி துகள்கள் மற்றும் இரும்புத் துகள்கள் கலந்து செய்யப்படும் மாஞ்சா கயிறெனும் கொலை ஆயுதங்கள் மூலம் மனிதர்கள் மட்டும் மரிக்கவில்லை கடந்த 3 தினங்களில் சுமார் 500 பறவைகள் கொல்லப்பட்டும், ஊனமாக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் செயல்படும் பறவைகளுக்கான தொண்டு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுபோல் டெல்லியில் மட்டும் வருடம் முழுவதும் மாஞ்சா கயிறால் பாதிக்கப்படும் சுமார் 8000 பறவைகள் வரை தாங்கள் சிகிச்சையளிப்பதாகவும் இந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்.
தற்போது மாஞ்சா கயிற்றுடன் பட்டங்கள் பறக்கவிடுவதை முற்றாக தடை செய்துள்ளதுடன் மாஞ்சா கயிறை தயாரித்தாலோ விற்றாலோ அல்லது சேமித்து வைத்திருந்தாலோ ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் 5 வருடங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்க டெல்லி அரசு சட்டமியற்றிவுள்ளது.
Source: BBC/Msn
தமிழில்: நம்ம ஊரான்
இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களில் ஒன்றாக டெல்லியிலும் வட நாட்டின் சில மாநிலங்களிலும் பட்டம் விடும் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும். அப்படி பட்டம் பறக்க விட்ட நிகழ்ச்சி 2 சிறார்கள் ஒரு இளைஞர் என மூவரின் உயிரை பறித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் நாள் பட்டங்களை கார்களின் மேற்கூரை (Car Sun Roof) மேல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாஞ்சி கோயல் (வயது 3), ஹரி (வயது 4) மற்றும் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த ஜஃபர் கான் (வயது 22) ஆகியோர் மாஞ்சா கயிறால் கழுத்தறுபட்டு இறந்துள்ளனர். போலீஸ்காரர் ஒருவரும் காயத்துடன் தப்பியுள்ளார்.
இதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு மொராதபாத்தில் 5 வயது சிறுவனும் 2014 ஆம் ஆண்டு 4 வயது சிறுமியும் மாஞ்சா கயிறால் கொல்லப்பட்டுள்ளனர்.
இரக்கமற்ற பாவிகளால் கண்ணாடி துகள்கள் மற்றும் இரும்புத் துகள்கள் கலந்து செய்யப்படும் மாஞ்சா கயிறெனும் கொலை ஆயுதங்கள் மூலம் மனிதர்கள் மட்டும் மரிக்கவில்லை கடந்த 3 தினங்களில் சுமார் 500 பறவைகள் கொல்லப்பட்டும், ஊனமாக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லியில் செயல்படும் பறவைகளுக்கான தொண்டு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுபோல் டெல்லியில் மட்டும் வருடம் முழுவதும் மாஞ்சா கயிறால் பாதிக்கப்படும் சுமார் 8000 பறவைகள் வரை தாங்கள் சிகிச்சையளிப்பதாகவும் இந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினர்.
தற்போது மாஞ்சா கயிற்றுடன் பட்டங்கள் பறக்கவிடுவதை முற்றாக தடை செய்துள்ளதுடன் மாஞ்சா கயிறை தயாரித்தாலோ விற்றாலோ அல்லது சேமித்து வைத்திருந்தாலோ ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் 5 வருடங்கள் வரை சிறை தண்டனையும் விதிக்க டெல்லி அரசு சட்டமியற்றிவுள்ளது.
Source: BBC/Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.