.

Pages

Thursday, August 18, 2016

மக்கள் சட்ட உரிமைகள் கழக ஐம்பெரும் விழா !

பேராவூரணி, ஆகஸ்ட் -18
மக்கள் சட்ட உரிமைகள் கழகம் தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பின் சார்பில் பேராவூரணி தனம் மஹாலில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.

சுதந்திர தினவிழா, சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு விழா, விருது வழங்கும் விழா, நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கலந்தாய்வு கூட்டம் என நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் வேத.குஞ்சருளன் தலைமை வகித்தார்.

மகாலெட்சுமி, இ.குருசேவ், எஸ்.கருப்பையன், ஆ.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.யோகானந்தம் வரவேற்றார்.
அமைப்பின் தலைவர் ஜி.ஜெயபாலன், பொதுச்செயலாளர் யு.வசந்த், நிர்வாகிகள் எஸ்.செல்வராஜ், இரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விருது வழங்கல் விழாவில்  பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், காவல்துறை ஆய்வாளர் என்.அன்பழகன், பத்திரிக்கையாளர் ஏ.கே.வெள்ளிமலை, டாக்டர் வி.சௌந்தரராஜன், ஆசிரியர் செ.ராமநாதன், அக்ரி வீ.நடராஜன் ஆகியோர் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தமைக்காக விருது வழங்கி பாராட்டப்பட்டனர்.

விழாவில் மாவட்ட புரவலர் அதிரை மான் சேக், திமுக நகரச்செயலாளர் தனம் கோ.நீலகண்டன், அதிமுக மாவட்ட மாணவர் அணி ஆர்.பி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக பேராசிரியர் வேத.கரம்சந்த் காந்தி நன்றி கூறினார்.

முன்னதாக காலை ஆதனூர் புனித அன்னாள் துவக்கப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றுதல் மற்றும் சாலைப் போக்குவரத்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் வழங்குதல், நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம்  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.