.

Pages

Thursday, August 18, 2016

ஷார்ஜாவில் மின் சக்தியில் இயங்கும் வாகனங்களுக்கான ரீசார்ஜ் மையம் திறப்பு !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 18
சுரூக் (Shurooq) என்றழைக்கபடுகின்ற ஷார்ஜா முதலீடு மற்றும் வளர்ச்சி ஆணையம் (Sharjah Investments & Development Authirity) சார்பில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத மின் சக்தி (EV - Electric Vehicle) இயங்கும் வாகனங்களுக்கான மின் சக்தி மீள்நிரப்பு மையம் (Recharge Stations) ஷார்ஜாவின் அல் கஸ்பா பகுதியில் இரு இடங்களில் முதன்முறையாக திறக்கப்பட்டது.

துபாய் DEWA  (மின்சார வாரியம்) & RTA (போக்குவரத்துத் துறை) ஒத்துழைப்பின் கீழ் அமீரகத்திலேயே முதன்முதலாக துபாயின் பல்வேறு பகுதியிலும் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துள்ள இதுபோன்ற ரீசார்ஜ் மையங்களில் ஹைப்ரீட் வகை கார்களுக்கான மின் சக்தி சேமிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜாவில் இதுபோல் பல்வேறு இடங்களிலும் நிர்மாணிக்கப்படவுள்ள சுற்றுச்சூழலுக்கு ஏதுவான மின் வாகன ரீசார்ஜ் மையங்கள் (EV Recharge Stations) குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 2 புதிய BMW  - i8 மின்சக்தி கார்கள் இத்தகைய மையங்களில் நிறுத்தப்பட்டு ரீசார்ஜ் செய்யும் உத்திகள் கற்றுத் தரப்படுகின்றன.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.