.

Pages

Wednesday, August 17, 2016

36 ஆயிரம் அடி உயரத்தில் ஒரு குவா ! குவா சத்தம் !!

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 17
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று துபாயிலிருந்து ஃபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நோக்கி 269 பயணிகளுடன் 36000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த 'செபு பசிபிக் ஏர்லைன்ஸ்' விமானத்தில் குறை பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறக்க நடுவானில் பயணிகளின் எண்ணிக்கை 270 ஆனது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் தான் குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் நாள் குறிக்க அதற்கான சான்றுகளுடன் விமானமேறினார் முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்த அந்த இளம் ஃபிலிப்பைனிய தாய் டியானி டியாடோரா.

விமானம் இந்தியாவின் மேல் பறந்து கொண்டிருந்த போது திடீரென பிரசவ வலி ஏற்பட கிடைத்த வசதிகளை வைத்துக் கொண்டு விமானத்திலிருந்த 2 நர்ஸூகள் உதவி செய்தனர்.

குழந்தைக்கு மூச்சுத் திணறல் மற்றும் காது அடைப்புப் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என கருதிய பைலட் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் இறக்கினார். ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகளும் மருத்துவர்களும் தாய்க்கும் சேய்க்கும் தேவையான மனிதாபிமான மருத்துவ உதவிகளை செய்து அசத்தினர். விமானியும் இந்தியர்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க மறக்கவில்லை.

குறை பிரசவமாக இருந்தாலும் சுகப் பிரசவம் ஆன அந்தப் பெண் குழந்தை இனி செபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தில் தன் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பறக்கலாம் மேலும் விமான பயணத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அந்த விமானத்தின் பெயரை குறிக்கும் வகையில் "Cebuana Pacifica." என பெயர் சூட்டியுள்ளனர்.

என்ன ஒன்று, 8 மணி நேரத்தில் மணிலா சென்று சேர வேண்டிய விமானம் 18 மணி நேரத்தில் சென்றதாக சந்தோஷத்துடன் அலுத்துக் கொண்டார் அதில் பயணம் செய்த பயணி ஒருவர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.