.

Pages

Friday, August 19, 2016

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 37 பேர் கைது [ படங்கள் ]

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 19
சம்பா சாகுபடிக்கு கர்நாடக அரசிடம் தண்ணீரை பெற்று உடன் மேட்டூர் அணையை திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலார்கள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு - சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிராம்பட்டினம் செயலாளர் என். காளிதாஸ், விவசாய சங்கம் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஆ. சேதுராமலிங்க தேவர் ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்திற்கு ஆதரவாக திமுக சார்பில் அதிராம்பட்டினம் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில் திமுகவினர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி ஆகஸ்ட் மாதம் வரை கர்நாடகம் தர வேண்டிய 94 டிஎம்சி தண்ணீரை உடன் பெற்றுக்கொடுக்க, காவிரி மேலாண்மை வாரியம் - காவிரி ஒழுங்காற்றுக்குழுவை உடன் அமைத்திட மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 25 பேர், விவசாய சங்கத்தினர் 6 பேர், திமுகவினர் 6 பேர் உட்பட மொத்தம் 37 பேர் கைது செய்யப்பட்டு அதிராம்பட்டினம், செல்லியம்மன் சமுதயாக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.