மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் கிளை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜூம்மா பள்ளி அருகே நடைபெற்றது.
முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் தமுமுக துணைச்செயலாளர் செய்யது புஹாரி, மாணவர் இந்தியா மாநில நிர்வாகி சேக் அப்துல் காதர், மாணவர் இந்தியா அதிரை நகர பொறுப்பாளர் நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தூய்மையான அரசியல், ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்பு, விவசாயிகளின் நலன், அரசியல் அதிகாரத்தில் பங்கு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி மனிதநேய மக்கள் கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் பலர் மனிதநேய மக்கள் கட்சியில் புதிதாக சேர்ந்தனர். முகாம் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தது.
Masha allah
ReplyDelete