.

Pages

Friday, August 19, 2016

அதிரையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் !

அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 12
மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் கிளை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று அதிராம்பட்டினம் பெரிய ஜூம்மா பள்ளி அருகே நடைபெற்றது.

முகாமிற்கு மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் செயலாளர் எஸ்.ஏ இத்ரீஸ் அஹமது தலைமை வகித்தார். அதிராம்பட்டினம்  தமுமுக துணைச்செயலாளர் செய்யது புஹாரி, மாணவர் இந்தியா மாநில நிர்வாகி சேக் அப்துல் காதர், மாணவர் இந்தியா அதிரை நகர பொறுப்பாளர் நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தூய்மையான அரசியல், ஒடுக்கப்பட்டோரின் உரிமை மீட்பு, விவசாயிகளின் நலன், அரசியல் அதிகாரத்தில் பங்கு உள்ளிட்டவற்றை எடுத்துக்கூறி மனிதநேய மக்கள் கட்சியில் இணைய அழைப்பு விடப்பட்டது. இதில் பலர் மனிதநேய மக்கள் கட்சியில் புதிதாக சேர்ந்தனர். முகாம் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்தது.

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.