.

Pages

Friday, August 19, 2016

நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி !

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளினையொட்டி (20.08.2016) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

நல்லிணக்க நாள் உறுதிமொழி பின்வருமாறு:  
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன்.

மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பயிற்சி ஆட்சியர் திரு.பிரசாந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) திரு.ஜெய்னூலப்தீன், திரு.கணேசன் (கணக்கு), திரு.சொக்கலிங்கம் (வேளாண்மை), திரு.உதயகுமார், (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ஜனனி சௌந்தர்யா (நில எடுப்பு) திருமதி.சித்ரா (ஊராட்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கோபு அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.