அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 17
ஹஜ்ஜூப் பெருநாளைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை ஜூரம் ஊருக்குச் செல்வது, ஹஜ் உம்ராவிற்கு செல்வது, ஷாப்பிங் செய்வது என பலரையும் பரபரப்பாக பற்றி வருகிறது. இந்நிலையில் அமீரகத்தில் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 தினங்கள் விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஹிஜ்ரி மாதம் துல்காயிதா பிறை 30 உடன் முடிந்தால் செப்டம்பர் 9 முதல் 13 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைக்கலாம். ஒருவேளை துல்காயிதா பிறை 29 உடன் நிறைவுற்றால் செப்டம்பர் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 தினங்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும்.
அதேவேளை அரசுத் துறை ஊழியர்களுக்கு மேற்கூறிய பிறை கணக்கின்படி 6 அல்லது 5 தினங்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், குவைத்தில் அரசுத் துறை ஊழியர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று சவூதி மற்றும் அமீரக பிறை பார்த்தல் கமிட்டியினர் ஒன்று கூடி ஆலோசிக்கவுள்ள நிலையில், ஷார்ஜா கோளரங்கம் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வியாழன் அன்று பிறை தென்பட வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
துபாய், ஆகஸ்ட் 17
ஹஜ்ஜூப் பெருநாளைக்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை ஜூரம் ஊருக்குச் செல்வது, ஹஜ் உம்ராவிற்கு செல்வது, ஷாப்பிங் செய்வது என பலரையும் பரபரப்பாக பற்றி வருகிறது. இந்நிலையில் அமீரகத்தில் தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 5 தினங்கள் விடுமுறை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு ஹிஜ்ரி மாதம் துல்காயிதா பிறை 30 உடன் முடிந்தால் செப்டம்பர் 9 முதல் 13 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை கிடைக்கலாம். ஒருவேளை துல்காயிதா பிறை 29 உடன் நிறைவுற்றால் செப்டம்பர் 9 முதல் 12 ஆம் தேதி வரை 4 தினங்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும்.
அதேவேளை அரசுத் துறை ஊழியர்களுக்கு மேற்கூறிய பிறை கணக்கின்படி 6 அல்லது 5 தினங்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும், குவைத்தில் அரசுத் துறை ஊழியர்களுக்கு 9 நாள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் கூறுகின்றன.
எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று சவூதி மற்றும் அமீரக பிறை பார்த்தல் கமிட்டியினர் ஒன்று கூடி ஆலோசிக்கவுள்ள நிலையில், ஷார்ஜா கோளரங்கம் எதிர்வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி வியாழன் அன்று பிறை தென்பட வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.