.

Pages

Wednesday, August 17, 2016

துபாயில் பிறக்கும் வெளிநாட்டினர் குழந்தைகளுக்கான விசா நடைமுறை !

அதிரை நியூஸ்:
துபாய், ஆகஸ்ட் 17
துபாயில் ரெஸிடென்ட் விசாவுடன் வசிக்கக்கூடிய அனைத்து வெளிநாட்டினரும் துபையில் பிறக்கும் தங்களின் குழந்தைகளுக்கு 120 நாட்களுக்குள் கட்டாயமாக முறையான ஆவணங்களை சமர்ப்பித்து ரெஸிடென்ட் விசா எடுக்க வேண்டும் தவறுபவர்கள் அபராதம் செலுத்த நேரிடும்.

பிறந்த குழந்தைகளுக்கான விசா வேண்டும் ஆவணங்கள் என்பது தனியார் துறை, அரசுத்துறை மற்றும் சிறப்பு மண்டலப் பகுதி [ FREE  ZONES ] ஊழியர்கள் என சற்றே வேறுபடும்.

தனியார் துறை ஊழியர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
துபை General Directorate of Residency and Foreigners Affairs in Dubai (GDRFA) அறிவுறுத்தலின்படி, அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் சென்டர் வழியாக பூர்த்தி செய்யப்படும் விண்ணப்பங்களுடன் குழந்தையின் 2 போட்டோக்கள், குழந்தையின் அசல் பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழுடன் எமிரேட்ஸ் ஐடி விண்ணப்ப படிவ சான்றுடன் GDRFA அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், பெற்றோர்கள் இருவரின் பாஸ்போர்ட் மற்றும் விசா ஸ்டாம்ப் நகல்களுடன் இருவரின் எமிரேட்ஸ் ஐடியின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும்.

சான்றழிக்கப்பட்ட வீட்டு ஒப்பந்தப் நகல் (Attested Tenancy Contract), சமீபத்திய தேவா ரசீது (DEWA Bill) மற்றும் பணி ஒப்பந்த பத்திரங்களுடன் (Labour Contract) உங்களின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 3000 இருந்து 4000 திர்ஹங்களாக கூடுதல் படிகளுடன் (Allowances) இருக்க வேண்டும்.

குழந்தை பிறந்து 120 நாட்கள் எனும் கருணை காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறும் ஒவ்வொரு நாளுக்கு 25 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.

குழந்தையின் ரெஸிடென்ட் விசா விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 2 அல்லது 3 வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட்டில் விசா முத்திரை பதிந்து தரப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.