தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் ஏற்பாட்டின் பேரில் சமீபத்தில் திருமணம் முடித்த மணமக்கள் மற்றும் புனிதமிகு ரமலானுக்கு பிறகு மணவிழா காண உள்ள மணமக்களுக்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் வாழ்வியல் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நாளை வியாழக்கிழமை ( 25-05-2017 ) காலை 10 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது.
பள்ளி, கல்லூரியில் படித்த கையோடு, அல்லது அலுவலகப் பணியின் சுமைகளோடு மணமேடையில் வந்து அமரும் இன்றைய மணமக்களுக்கு, கணவன்-மனைவியின் உரிமைகள் - கடமைகள் என்ன என்பது குறித்தும், இல்லறத்தின் நெளிவு சுளிவுகள், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், உறவுகளின் அருமை ஆகியன குறித்தும், குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துவரும் திடீர் 'தலாக்', அவசர 'குலா' ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.
அதிரை வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அனைவரின் வரவேற்பை பெற்று வருகிறது. இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி, உறவு மேம்பட உதவும் என்பதாக பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அனைவரின் வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியை மீண்டும் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் மணமுடித்து இல்லற வாழ்வில் ஈடுபட்டுவரும் மணமக்கள் மற்றும் புதிதாக மணவிழா காண உள்ள மணமக்கள் அனைவரும் தங்களது பெற்றோருடன் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது. பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Please correct the date..
ReplyDelete