அதிரை நியூஸ்: ஜூன் 30
குவைத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வாராந்திர விடுமுறை நாட்களாகும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகுடா நாடுகளில் ஈதுல் பித்ரு எனும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டதால் ஞாயிறு முதல் செவ்வாய் வரை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது.
அடுத்த வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனிக்கு இடையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் இடைஞ்சலாக வர சுமார் 31,000 அரசு ஊழியர்கள் போலியான மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் 9 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபதித்துள்ளதை குவைத் தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஹிந்த் அல் ஸபீஃஹ் வன்மையாக கண்டித்துள்ளார்.
அலுவலகங்களும் சாலைகளும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியதால் அன்றாட அரசுப்பணிகளும் ஸ்தம்பித்தன. உயர் அதிகாரிகள் பலர் பொறுப்புடன் பணிக்கு திரும்பியிருக்கையில் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள இளநிலை ஊழியர்களும் அதிகாரிகளும் பணிக்கு திரும்பாததை அதிகார துஷ்பிரயோகமாகவே கருத முடியும்.
நீண்ட ஓய்வு தேவைப்படுவோர் வேலையிலிருந்து விலகி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் மாறாக பொதுநிதியிலிருந்து சம்பளம் பெறுவோர் வரம்பு மீறுவதை அனுமதிக்க முடியாது என்றும், போலியான மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
குவைத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வாராந்திர விடுமுறை நாட்களாகும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகுடா நாடுகளில் ஈதுல் பித்ரு எனும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டதால் ஞாயிறு முதல் செவ்வாய் வரை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது.
அடுத்த வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனிக்கு இடையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் இடைஞ்சலாக வர சுமார் 31,000 அரசு ஊழியர்கள் போலியான மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் 9 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபதித்துள்ளதை குவைத் தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஹிந்த் அல் ஸபீஃஹ் வன்மையாக கண்டித்துள்ளார்.
அலுவலகங்களும் சாலைகளும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியதால் அன்றாட அரசுப்பணிகளும் ஸ்தம்பித்தன. உயர் அதிகாரிகள் பலர் பொறுப்புடன் பணிக்கு திரும்பியிருக்கையில் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள இளநிலை ஊழியர்களும் அதிகாரிகளும் பணிக்கு திரும்பாததை அதிகார துஷ்பிரயோகமாகவே கருத முடியும்.
நீண்ட ஓய்வு தேவைப்படுவோர் வேலையிலிருந்து விலகி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் மாறாக பொதுநிதியிலிருந்து சம்பளம் பெறுவோர் வரம்பு மீறுவதை அனுமதிக்க முடியாது என்றும், போலியான மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.