அதிராம்பட்டினம், ஜூன் 18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை சார்பாக இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர் பா.பாரதி, பல் மருத்துவர் ஏ.நிரஞ்சனா தேவி ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 250 மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக பல் சம்பந்தபட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 50 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஆதிராஜாராம் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை சார்பாக இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் தம்பிக்கோட்டை வடகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முகாமை பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் தொடங்கி வைத்தார். அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர் பா.பாரதி, பல் மருத்துவர் ஏ.நிரஞ்சனா தேவி ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 250 மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக பல் சம்பந்தபட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 50 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டனர். முடிவில் பட்டுக்கோட்டை ஆதிராஜாராம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.