.

Pages

Thursday, June 22, 2017

இ-சேவை மையத்தில் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை: ஆட்சியர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 3,26,317 ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இசேவை மையத்தில் மூலம் ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு இன்று (22.06.2017)ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத்திட்டத்;தில் பொது மக்கள் அத்தியாவசிப் பொருட்கள் பெற்று கொள்வதற்காக வழங்கப்பட்ட பயன்பாட்டில் இருந்து வரும் குடும்ப அட்டைகளுக்கு புதிய வடிவில் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது.  இது வரை நமது மாவட்டத்தில் 3,26,317 ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் நியாய விலை அங்காடி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை குடும்ப அட்டை பெறாத குடும்பத்தினர் புதிய குடும்ப அட்டை வேண்டி உரிய ஆவணங்களுடன் இணைய தள மூலம் விண்ணப்பித்தால்ää விண்ணப்பங்கள் வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை செய்து ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கான ஒப்புதல் இணைய தளத்தில் அளித்தவுடன் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வெற்றிகரமாக அச்சிடப்பட்டு தாலுகா அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என்ற குறுஞ்செய்தி வரும். இவ்வாறு குறுஞ்செய்தி வரப்பெற்ற விண்ணப்பதாரர்கள் மொபைல் போனுடன் அருகில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தப்படும் இசேவை மையத்திற்கு சென்று விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் விவரத்தினை தெரிவிக்க வேண்டும்.

தஞ்சாவ10ர் மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் அந்தந்த வட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பூதலூர், திருவிடைமருதூர், பாபநாசம், திருவையாறு, கும்பகோணம் ஆகிய 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டை பெற்றுக் கொள்ளலாம்.  இந்த இசேவை மையத்தில் குடும்ப தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் கங்காதரன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், வட்ட வழங்கல் அலுவலர் திரு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.