.

Pages

Wednesday, June 28, 2017

அதிரை ஈசிஆர் சாலையில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ பள்ளி' தொடக்க விழா: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி' சிபிஎஸ்இ கல்விக்கூடத்தின் தொடக்க விழா புதன்கிழமை காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து பேசுகையில்;
'இக்கல்விக்கூடம் வியாபார நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் உலகத்தரத்தில் தரமான கல்வி பயின்று, எதிர்காலத்தில் ஒரு தொழில் முனைவோராகவும், தலை சிறந்த விஞ்ஞானியாகவும், மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் அங்கம் வகிப்பவராகவும், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், பேராசிரியர், இராணுவத்தில் பணியாற்றுபவர்களாக உருவாகி நாட்டிற்கும், சமூகத்திற்கும் பயன் தரக்கூடியவர்களாக மாற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது' என்றார்.

விழாவில் அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி கலந்துகொண்டு பேசுகையில்; நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய சிறந்த கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம், சிறந்த சமூகத்தினரை உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்க வாழ்த்துகிறேன்' என்றார்.

சிறப்பு விருந்தினராக திருச்சி சிவானி கல்விக் குழுமம் பதிவாளர் முனைவர் ஆர். ராஜேந்திரன் கலந்துகொண்டு கல்விக்கூடத்தை தொடங்கி வைத்து பேசுகையில்;
கல்வியில் உயர்ந்த நிலை அடைய மொழி அறிவு அவசியம். மொழிகளில் சிறந்து விளங்க 4 படிகள் உள்ளது. அவை காதில் கேட்பது (Listening), சரளமாக பேசுவது, (Speaking) வாசிப்பது (Reading), எழுதுவது (Writing) ஆகியன ஆகும். குழந்தைகள் பேசும் தாய் மொழி, பள்ளிகளில் கற்பிக்கும் மொழிகள் இவைகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை கற்றுக்கொடுத்தால் மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். நம்முடைய குழந்தைகளை நாம் வாழும் தேசத்தில், நாம் வாழும் பகுதியில் முழு அறிவு பெற்றவராக மாற்றுவது ஒன்றுதான் நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்' என்றார்.

தொடக்கத்தில், பள்ளி அரபி ஆசிரியர் மவ்லவி சிராஜுதீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் பள்ளி முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகப் பொருளாளர் முஹம்மது இப்ராஹிம், இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வர் மீனா குமாரி, பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

விழா துளிகள்:
1. அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது இப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் நவீன கட்டமைப்பில் புதிய கல்வி நிறுவனம் 9 புதிய வகுப்பறையுடன் தொடங்கி உள்ளது.

2. கல்விக்கூடத்தின் ஆசிரியர்களாக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நன்கு பயிற்சியும், அனுபவமும் பெற்ற, உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் விழா மேடையில் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

3. கல்விக்கூடத்தில் புதிதாக இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்டவை விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

4. விழாவில் பெண்களுக்கு தனியாக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

5. விழாவில் மாணவ, மாணவிகளின் புதிய சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது.

சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கீழ்காணும் முகவரியில் பெறலாம்.
திருமதி டி.வி ரேவதி
ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி
கிழக்கு கடற்கரைச்சாலை
ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம்
91 98416 99789 / 86103 55806

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
அகமது அன்வர்
யுனைடட் பவுண்டேஷன்
நடுத்தெரு, அதிராம்பட்டினம்
0091 79043 74092

குறிப்பு:
1. கே.ஜி வகுப்பு முதல்  கிரேடு III வகுப்பு வரை இருபாலர் கல்வி முறை..
2. கிரேடு  IV வகுப்பு முதல்  VII வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும்.. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.