.

Pages

Sunday, June 18, 2017

பிலால் நகர் ஆபத்தான மின்கம்பம் மாற்றி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை !

அதிராம்பட்டினம், ஜூன்-18
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பதை மாற்றித் தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஏரிப்புறக்கரை ஊராட்சி 1 வது வார்டுக்கு உட்பட்ட பிலால் நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மின்கம்பம் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

மின்கம்பத்தின் காங்கிரட் கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்துள்ளது. இம்மின்கம்பத்தில் சுமார் 6 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மின் இணைப்புகள் உள்ளன. மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றித்தர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.