.

Pages

Sunday, June 18, 2017

அமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு நோன்பு பெருநாள் விடுமுறை அறிவிப்பு

அதிரை நியூஸ்: ஜூன் 18
அமீரகத்தின் தனியார் துறை நிறுவனங்களுக்கு ஈத் அல் பித்ர் எனும் நோன்பு பெருநாள் விடுமுறையை அறிவித்துள்ளது அமீரக மனிதவளத்துறை அமைச்சகம். அதன்படி,

புனிதமிகு ரமலான் நோன்பு பிறை 29 (ஜூன் 24 – சனிக்கிழமை) உடன் நிறைவுற்றால் ஷஃபான் பிறை 1 (ஜூன் 25 – ஞாயிறுக்கிழமை) பெருநாள் தினம் அனுசரிக்கப்படும். தொடர்ந்து 2 நாட்கள் (திங்கள் மற்றும் செவ்வாய்) விடுமுறை தினங்களாகும்.

மீண்டும் பணி ஜூன் 28 புதன்கிழமை முதல் துவங்கும். வெள்ளி, சனி வாராந்திர விடுமுறையுள்ளவர்களுக்கு மட்டும் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும், மற்றவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே விடுமுறையாக அமையும்.

புனிதமிகு ரமலான் நோன்பு பிறை 30 (ஜூன் 25 – ஞாயிற்றுக்கிழமை) உடன் நிறைவுற்றால் ஒருநாள் முன்பாக ஜூன் 24 – சனிக்கிழமை முதல் விடுமுறை துவங்கும். (ஜூன் 26 - திங்கட்கிழமை அன்று பெருநாள் அனுசரிக்கப்படும்).

மீண்டும் பணி ஜூலை 2 – ஞாயிற்றுக்கிழமை அன்று துவங்கும். அதாவது முன், பின் வெள்ளி சனி விடுமுறைகளையும் சேர்த்து மொத்தம் 9 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.