.

Pages

Thursday, June 29, 2017

இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பட்டா மாற்றம் பெரும் வசதி !

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் இசேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். மின் கட்டணம் செலுத்தலாம். வருமானச் சான்று, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாற்றம், கடவுச்சீட்டு பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது  இ-சேவை மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வட்ட அலுவலகங்களில் சான்றுகள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை களைவதற்காகவும், மக்களுக்கு சிறப்பான முறையில் சேவைகள் அளித்திட வேண்டும் என்பதற்காகவும் அரசால், பொது  இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்ட அலுவலகங்களில் மட்டுமே இயங்கி வந்த நிலையில், பொதுமக்களுக்கு கூடுதல் சேவை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் நகராட்சி அலுவலகங்களிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த 13 பொது  இ-சேவை மையங்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இம்மையங்களில் வருமானச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாற்றம் ஆகியவற்றிற்க்கு மனு கட்டணமாக ரூ.60/-ம் சமூக நலத்துறை மூலம் பெறப்படும் உதவிதிட்டங்களுக்கான சான்றுகளுக்கு மனு கட்டணமாக ரூ.120/-ம் பெறப்படுகிறது மேலும் இம்மையத்தில் கடவுச்சீட்டு (Passport) புதிதாக பெற, மற்றும் புதுப்பிக்கும் சேவை கட்டணமாக ரூ.100/-ம் பெறப்படுகிறது.

இம்மையங்களில் ஆதார் அட்டை பெற ஆதார் மையங்களில் பதிவு செய்து பெற்ற ஒப்புகை சீட்டு இருந்தால், அதை பயன்படுத்தி பிரிண்ட் (Print) எடுத்துக் கொள்ள ரூ.10/-ம், பிளாஸ்டிக் கார்டு வழங்கிட ரூ.30/-ம் பெறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மூலமாக வழங்கப்படும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கிட ரூ.25/-ம், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.10/- சேவைக்கட்டணமாக பெறப்படுகிறது.

மேலும் மின் கட்டணம் செலுத்தும் இம்மையங்களில் செய்யப்படுகிறது. மின் கட்டணத் தொகை ரூ.1-லிருந்து ரூ.1,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.15/- ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.1001-லிருந்து ரூ.3,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.25/-ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.3,001-லிருந்து ரூ.5,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.40/- ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.5,001-லிருந்து ரூ.10,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.50/- ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.10,000/-க்கு மேல் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.60/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், மின்கட்டணத் தொகையுடன் வரையறுக்கப்பட்டுள்ள சேவைக்கட்டணத்தைத் தவிர கூடுதலாக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தற்பொழுது பயன்டுத்தி வரும் குடும்ப அட்டைக்கு பதிலாக புதிதாக மின்னணு குடும்ப அட்டையை தமிழ்நாடு அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கி வருகிறது. ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்களில் ரூ.30/- கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகை ( Ration Card Type ) மாற்றம் செய்தல், சிலிண்டர்களின் விவரத்தினை மாற்றம் செய்தல், குடும்ப தலைவர் பெயரை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ-சேவை மையங்களில் ரூ.60/- செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மேற்காணும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தனி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்கள் கூட்டுறவுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இம்மையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) அவர்களிடம் புகார் அளிக்கலாம்.

நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணங்களை மட்டும் செலுத்தி மேற்காணும் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அனைத்து  இ-சேவை மையங்களிலும் செய்யப்படும் சேவையில் குறைபாடு காணப்பட்டாலோ அல்லது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தாலோ மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.