.

Pages

Tuesday, June 27, 2017

துபாயில் போக்குவரத்து குற்றங்கள் மீதான அபராதங்கள் மீது 50% தள்ளுபடி !

அதிரை நியூஸ்: ஜூன் 27
அமீரகம் 2017 ஆம் ஆண்டை வழங்கி மகிழும் ஆண்டாக (Year of Giving) அறிவித்து பல்வேறு நற்காரியங்களில் ஈடுபட்டு வருவது அறிந்ததே, அதன் தொடரில் ஒன்றாக 2016 ஆண்டு மற்றும் அதற்கும் முன்பாக நிகழ்த்தப்பட்ட அனைத்து போக்குவரத்து குற்றங்களுக்காக விதிக்கப்பட்டு தற்போது வரை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள அபராதங்களை 50% தள்ளுபடி சலுகையுடன் செலுத்த துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் உத்தரவிட்டுள்ளதாக துபை போலீஸ் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லா கலீபா அல் மெர்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த சலுகை 2017 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட அபராதங்களுக்கு பொருந்தாது. மேலும், துபை போக்குவரத்து துறை அபராதங்களை செலுத்துவதற்காக ஏற்படுத்தியுள்ள அமைப்புக்களான போக்குவரத்து துறை அலுவலகங்கள், துபை போலீஸ், வாகனப் பதிவு மையங்கள், வங்கிகளின் ஆன்லைன் தளங்கள் மற்றும் பல்வேறு அரசு சேவைத்துறை அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் (Kiosk) ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம் என்றும், இங்குள்ள இயந்திரங்கள் மற்றும் ஆன்லைன் சேவை அமைப்புக்கள் அனைத்தும் 50 சதவிகித கட்டணங்களை மட்டுமே தெரிவிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் அல் மெர்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.