.

Pages

Sunday, June 25, 2017

சர்வதேசப் பிறை அடிப்படையில் அதிரையில் இன்று பெருநாள் தொழுகை ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 25
சவூதி, அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பெரும்பாலான கிழக்கு ஆசிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 'உலகின் ஒரு இடத்தில் பிறை தென்பட்டால் முழு உலகும் அதைக்கடைப்பிடிக்க வேண்டும்' என்கிற அடிப்படையில் சர்வதேசப்பிறையை பின்பற்றக்கூடியவர்கள் சார்பில், அதிராம்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை ( 25-06-2017 ) காலை 7 மணிக்கு எம்.எம்.எஸ் அவென்யூ, சிஎம்பி லேன் ( அம்பேத்கர் நகர் ) பகுதியில் நபி வழியில் ரமலான் பெருநாள் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது. இதில் தவ்பீக் கலந்துகொண்டு பெருநாள் பேரூரை மற்றும் சிறப்புத் தொழுகையை நடத்தினார். தொழுகையில் பெண்கள் உட்பட 100 பேர் கலந்துகொண்டனர்.

2 comments:

  1. அல்லாஹ்வின் தூதர் வழியில் அல்லாமல் சர்வதேஷ பிறையின் வழியில்! நன்றி அதிரை நீயூஸ்.

    ReplyDelete
  2. Sarvadesha pirai'nu solli2 nabi vazhiyam😅😅

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.