அதிரை நியூஸ்: ஜூன் 29
விமான எஞ்சினுக்குள் காசை எறிந்த சைனீஸ் பாட்டியால் 6 மணிநேரம் விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. சுமார் 80 வயதுடைய சைனீஸ் பாட்டி ஒருவர் விமான விபத்துக்கள் மற்றும் விமானங்கள் காணமல் போவதைப் பற்றி கேட்டறிந்திருப்பார் போல் தெரிகிறது, அவரும் ஒரு நாள் விமானத்தில் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டவுடன் வாழ்ந்து முடித்த 80 வயது பாட்டிக்கும் உயிர் மேல் ஆசை ஏற்பட்டதால் தனது இஷ்ட தெய்வமான புத்தரை வணங்கி விட்டு வழமைபோல் உண்டியலை தேடியுள்ளார்.
அவர் தேடிய உண்டியல் ஷங்காய் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான எஞ்சின் ரூபத்தில் தட்டுப்பட 'பயணம் நல்ல விதமாக அமைய வேண்டும்' என வேண்டி காசை எஞ்சினுக்குள் விட்டெறிந்துள்ளார். விளைவு அந்த விமான எஞ்சினை சரிசெய்து மீண்டும் பறக்க 6 மணிநேரம் கூடுதல் தாமதமாகியுள்ளது.
ஷங்காய் போலீஸார் பாட்டியின் வயதை கருத்திற் கொண்டும், அவரது நோக்கத்தை மதித்தும், சமூக வலைத்தள போராளிகளின் வேண்டுகோளை ஏற்றும் அந்தப் பாட்டியை மன்னித்து விடுவித்துவிட்டனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
விமான எஞ்சினுக்குள் காசை எறிந்த சைனீஸ் பாட்டியால் 6 மணிநேரம் விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. சுமார் 80 வயதுடைய சைனீஸ் பாட்டி ஒருவர் விமான விபத்துக்கள் மற்றும் விமானங்கள் காணமல் போவதைப் பற்றி கேட்டறிந்திருப்பார் போல் தெரிகிறது, அவரும் ஒரு நாள் விமானத்தில் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டவுடன் வாழ்ந்து முடித்த 80 வயது பாட்டிக்கும் உயிர் மேல் ஆசை ஏற்பட்டதால் தனது இஷ்ட தெய்வமான புத்தரை வணங்கி விட்டு வழமைபோல் உண்டியலை தேடியுள்ளார்.
அவர் தேடிய உண்டியல் ஷங்காய் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான எஞ்சின் ரூபத்தில் தட்டுப்பட 'பயணம் நல்ல விதமாக அமைய வேண்டும்' என வேண்டி காசை எஞ்சினுக்குள் விட்டெறிந்துள்ளார். விளைவு அந்த விமான எஞ்சினை சரிசெய்து மீண்டும் பறக்க 6 மணிநேரம் கூடுதல் தாமதமாகியுள்ளது.
ஷங்காய் போலீஸார் பாட்டியின் வயதை கருத்திற் கொண்டும், அவரது நோக்கத்தை மதித்தும், சமூக வலைத்தள போராளிகளின் வேண்டுகோளை ஏற்றும் அந்தப் பாட்டியை மன்னித்து விடுவித்துவிட்டனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.