அதிராம்பட்டினம், ஜூன் 19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியில் இரவில் நடமாடும் பன்றிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பகுதியில் அன்றாடம் சேருகின்ற இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், தேங்கி நிற்கும் கழிவு நீர் ஆகிய இடங்களில் பன்றிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு சி.எம்.பி லேன் பகுதிகளில் இரவில் பன்றிகள் பிள்ளை குட்டிகளோடு சுற்றித்திரிகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் இப்பகுதி ஈரப்பதமாக உள்ளதால், இப்பகுதியில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளை கிளறுவதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பன்றிகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. தற்போது பன்றிகளின் வரத்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். மேலும் அதிராம்பட்டினம் பகுதியை தூய்மைப் பகுதியாக வைத்திருக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பைசல் கூறியது;
'அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் பகுதியில் கடந்த சில நாட்களாக பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குப்பைக்கழிவுகளை கிளறுவதன் மூலம் துர்நாற்றம் வீசி வருகிறது. தொழுகைக்கு இரவில் பள்ளிவாசலுக்கு செல்லும் தொழுகையாளிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.
சி.எம்.பி லேன் பகுதியில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அதிரை பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் பகுதியில் இரவில் நடமாடும் பன்றிகளை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பகுதியில் அன்றாடம் சேருகின்ற இறைச்சிக்கழிவுகள், குப்பைக்கழிவுகள், தேங்கி நிற்கும் கழிவு நீர் ஆகிய இடங்களில் பன்றிகளின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு சி.எம்.பி லேன் பகுதிகளில் இரவில் பன்றிகள் பிள்ளை குட்டிகளோடு சுற்றித்திரிகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் இப்பகுதி ஈரப்பதமாக உள்ளதால், இப்பகுதியில் கொட்டிக்கிடக்கும் கழிவுகளை கிளறுவதன் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பகுதிகளில் கடந்த சில வருடங்களாக பன்றிகளின் நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்தது. பேரூராட்சி நிர்வாகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வந்தது. தற்போது பன்றிகளின் வரத்து மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினர் அச்சப்படுகின்றனர். மேலும் அதிராம்பட்டினம் பகுதியை தூய்மைப் பகுதியாக வைத்திருக்க நினைக்கும் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பைசல் கூறியது;
'அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன் பகுதியில் கடந்த சில நாட்களாக பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குப்பைக்கழிவுகளை கிளறுவதன் மூலம் துர்நாற்றம் வீசி வருகிறது. தொழுகைக்கு இரவில் பள்ளிவாசலுக்கு செல்லும் தொழுகையாளிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.
சி.எம்.பி லேன் பகுதியில் சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அதிரை பேரூர் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.