.

Pages

Friday, June 23, 2017

சம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை சங்க அலுவலக வளாகம் மற்றும் செக்கடிப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

எம்.எஸ் ஷஹல் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் துணைத் தலைவர் எம்.எஸ் சிஹாபுதீன் தலைமை வகித்தார். சம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் தனது சிறப்புரையில், சங்கத்தின் கடந்த கால வரலாறு, ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் ரமலான் சிறப்புகள் குறித்து பேசினார். 'சிஷ்வா' குறித்து அறிமுக உரையை அவ்வமைப்பின் துபாய் பொறுப்பாளர் ஜமாலுதீன் நிகழ்த்தினார்.

தொடக்கத்தில், சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க செயலர் எம்.எஃப் முஹம்மது சலீம் ஆண்டரிக்கை வாசித்தார். இதில் சங்கம் கடந்த ஓராண்டில் ஆற்றிய சேவை, செயல்பாடுகள் குறித்து பட்டியலிட்டார். முடிவில் மவ்லவி ஹாபிழ் ஏ.எல் ஹாரூன் சிறப்பு துஆ ஓதினார்.

இந்நிகழ்ச்சியில், சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள் 600 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவரையும் சம்சுல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகள் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
  
 
 
 
 
 
 
  
 
 

1 comment:

  1. மாஷா அல்லாஹ் சிறப்பாக நடந்தேரியது இஃப்தார் நிகழ்வு செய்திகளை உடனுக்குடன் தருவதில் அ.நி க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.