.

Pages

Saturday, June 24, 2017

அதிரையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி: அனைத்து சமயத்தவர் பங்கேற்பு ( படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூன் 24
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாரா மற்றும் லாவண்யா திருமண மஹால்களின் உரிமையாளரும், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவருமாகிய எம். அஹமது ஏற்பாட்டின் பேரில் அனைத்து சமயத்தவர் கலந்துகொண்ட சமூக நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பட்டுக்கோட்டை சாலையில் உள்ள லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர் ரெங்கராஜன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சயாத்தார்கள், லயன்ஸ் சங்கப் பொறுப்பாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 650 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் சாரா அஹமது மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.