.

Pages

Wednesday, June 21, 2017

அதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், ஜூன் 21
எஸ்டிபிஐ கட்சியின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிராம்பட்டினத்தில் 6 இடங்களில் கொடியேற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் முகமது அஜார் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் 9 ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி அதிராம்பட்டினம் செக்கடி மேடு, வண்டிப்பேட்டை, சிஎம்பி லேன் வி.கே.எம் ஸ்டோர் அருகில், கல்லூரி முக்கம், ஈசிஆர் சாலை பிலால் நகர் ரயில்வே கேட் அருகில் ஆகிய 6 இடங்களில் அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் இசட். முகமது இலியாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், அதிரை பேரூர் தலைவர் முஹம்மது அஜார், துணைத் தலைவர் நடராஜ், துணைச்செயலர்கள் நூருல் அமீன், சலீம் ஆகியோர் தலா ஒரு இடங்களில் எஸ்டிபிஐ கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

4 comments:

  1. அதிராம் பட்டினம் தக்வாபள்ளியில் இன்று இஃப்தாருக்கு நானும் லட்டு சாப்பிட்டேன்.
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.