அதிரை நியூஸ்: மார்ச் 01
அமீரகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை இன்னும் அதிகமாக ஈர்ப்பதற்காகவும் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்துவதற்காகவும் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு மத்திய பெடரல் அரசு சார்பாக வசூலிக்கப்பட்டு வரும் சேவைக்கட்டணங்களை ஏற்றுவதில்லை என அமீரகப் பிரதமரும் துணை ஜனாதிபதியும் துபை எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவானது தொழில் உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும், பெட்ரோலிய வருமானத்தை மட்டும் நம்பியிராத மாற்றுப் பொருளாதார திட்டங்களை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் அமீரக ரயில்வேக்கான வரைவு திட்டங்களும், சுற்றுலா சார்பான கப்பல் ஊழியர் மற்றும் பணியாளர்களுக்கு (The crews of tourism cruises) 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் பன்னுழைவு அனுமதி கொண்ட விசாவை (Multiple Entry Visa for 6 Month) வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அமீரகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை இன்னும் அதிகமாக ஈர்ப்பதற்காகவும் பொருளாதார, சமூக ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்துவதற்காகவும் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்கு மத்திய பெடரல் அரசு சார்பாக வசூலிக்கப்பட்டு வரும் சேவைக்கட்டணங்களை ஏற்றுவதில்லை என அமீரகப் பிரதமரும் துணை ஜனாதிபதியும் துபை எமிரேட்டின் ஆட்சியாளருமான ஷேக் முஹமது பின் ராஷித் அல் மக்தூம் அவர்கள் தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவானது தொழில் உற்பத்தி மற்றும் வர்த்தகத் துறையை மேலும் வலுப்படுத்தும் என்றும், பெட்ரோலிய வருமானத்தை மட்டும் நம்பியிராத மாற்றுப் பொருளாதார திட்டங்களை ஊக்குவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் அமீரக ரயில்வேக்கான வரைவு திட்டங்களும், சுற்றுலா சார்பான கப்பல் ஊழியர் மற்றும் பணியாளர்களுக்கு (The crews of tourism cruises) 6 மாதத்திற்கு செல்லுபடியாகும் பன்னுழைவு அனுமதி கொண்ட விசாவை (Multiple Entry Visa for 6 Month) வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.