.

Pages

Sunday, March 11, 2018

அமீரகத்தில் அரசுத்துறை புதிய பணியாளர்களின் திறனாய்வுக்காலம் 9 மாதமாக உயர்வு!

அதிரை நியூஸ்: மார்ச் 11
அமீரகத்தில் அரசுத்துறையில் வேலையில் சேர்பவர்களின் கண்காணிப்பு ஆய்வுக்காலம் 9 மாதமாக உயர்த்தப்பட்டது.

அமீரக பெடரல் அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு தற்போது 6 மாதங்கள் கண்காணிப்பு / திறனாய்வு காலங்களாக (Probation period) உள்ளன. இவை இனி 9 மாதங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக அமீரக பெடரல் அரசு வேலைவாய்ப்புகளுக்கான மனிதவளத்துறை (The Federal Authority for Governmental Human Resources - FAHR) அறிவித்துள்ளது. எனினும், பொது இயக்குனர்கள் மற்றும் செயலாளர்கள் போன்ற உயர்மட்ட பதவிகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. The rule made exception for general directors and under-secretary positions

கண்காணிப்பு காலப் பகுதியில் அவருக்கு மேலுள்ள மேனேஜர்கள் வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஒப்பந்ததத்தில் காணப்பட்டுள்ள ஷரத்துக்களின் அடிப்படையில் கண்காணித்து அறிக்கை வழங்குவார் During the probation, the manager should evaluate the employee's work according to the standards and yardsticks spelt out in the contract . அந்த அறிக்கையின் அடிப்படையில் அவரை தொடர்ந்து வேலையில் வைத்துக் கொள்வதாக அல்லது நீக்குவதா என முடிவு செய்யப்படும்.

ஓருவேளை சம்பந்தப்பட்ட ஊழியர் கண்காணிப்பு கால முடிவில் வேலையை விட்டு நீக்கப்படுவதாக இருந்தால் அவருக்கு 5 நாட்கள் அவகாசம் (Notice Period) வழங்கப்படும். அதேபோல் ஒப்பந்தத்தில் கண்டுள்ளபடி அவருக்குரிய சம்பள நிலுவைகள் மற்றும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான விமான டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.

Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.