தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் என். முகமது ரபீக், எஸ்.ரியாஸ் அகமது. இளம் தொழில் முனைவோர்கள். இவர்கள், அமீரகம், துபை ஃபுர்ஜ் அல் முரார் பகுதியில், லத்திபா மஸ்ஜீத் எதிரில் 'தஞ்சை ரெஸ்டாரண்ட்' என்ற பெயரில் புதிதாக தொடங்க இருக்கும் உயர்தர அறுசுவை உணவகத்தின் திறப்பு விழா எதிர்வரும் (29-03-2018) அன்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
இதுகுறித்து உணவக உரிமையாளர்கள் என். முகமது ரபீக், எஸ்.ரியாஸ் அகமது ஆகியோர் கூறியது;
புதிதாக தொடங்க இருக்கும் எங்களது உணவகத்தில், குறைந்த கட்டணத்தில் உயர்தர அறுசுவையில் தென்னிந்திய அனைத்து வகை சைவ / அசைவ உணவுகள் உடனுக்குடன் தயார் செய்து சுடச்சுட வழங்கப்படும். மேலும், அதிராம்பட்டினத்தில் பிரசித்திபெற்ற மீன் / மட்டன் / கோழி பிரியாணி வகைகள், அஞ்சுகறி சஹன் உணவு, மோட்டா ரைஸ், பாரிக் ரைஸ், புரோட்டா, சப்பாத்தி உள்ளிட்ட அனைத்து வகை உணவுகள், அனுபவமிக்க மேஸ்திரிகளைக் கொண்டு சுவையுடன் தயாரித்து வழங்க உள்ளோம். இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு.
உணவகத் திறப்பு விழாவில், அமீரக வாழ் தமிழர்கள் அனைவரும் தவறாது
கலந்துகொண்டு, எங்களது புதிய உணவகம் மேம்பட தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்' என்றனர்.
தொழில் சிறக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்
ReplyDelete