.

Pages

Wednesday, March 14, 2018

அமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை என்ற கிடப்பில் கிடந்த சட்டம் அமலாகிறது!

அதிரை நியூஸ்: மார்ச் 14
அமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை என்ற கிடப்பில் கிடந்த சட்டம் அமலாகிறது.

தனக்குப் போக எஞ்சியதே தான தர்மம் என்ற சொல்வழக்கை கேள்விப்பட்டிருப்போம். அந்த அடிப்படையில் கடந்த 1980 ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக்களில் அமீரகத்தினருக்கே முன்னுரிமையளிக்க வேண்டும், தகுதியான அமீரக ஊழியர் கிடைக்காவிட்டால் மட்டுமே வெளிநாட்டினருக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்ற சட்டம் பெரியளவில் செயல்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது.

நேற்று (செவ்வாய்) நடைபெற்ற பெடரல் நேஷனல் கவுன்சில் (Federal National Council - FNC) கூட்டத்தில் மேற்காணும் சட்டம் தூசிதட்டி எடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதுடன் நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய தகவல்திரட்டி (Database) ஒன்றை ஏற்படுத்துமாறும் அமீரக மனிதவளத்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது. இத்தீர்மானத்தின்படி, எந்தவொரு வேலைக்கும் விசா வழங்கிடுமுன் அவ்வேலையை செய்யத் தகுதியான இமராத்தி யாராவது விண்ணப்பித்துள்ளார்களா என பார்க்க வேண்டும். பதிவு செய்திருந்தால் அந்த வேலை இமராத்திக்கு இல்லையேல் வெளிநாட்டு ஊழியருக்கு தர வேண்டும் என்றும், இந்த நடைமுறை அனைத்து அரசு (Govt), அரசு பங்களிப்புடன் செயல்படும் நிறுவனங்கள் (Semi Govt) மற்றும் தனியார் துறைக்கும் (Private Sectors) செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இமராத்திகளை வேலைகளுக்கு ஏற்ப பன்படுத்தி தயார்படுத்தும் பயிற்சிகளையும் பெடரல் நேஷனல் கவுன்சில் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்படி சட்டத்தை அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா என தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறை தெரு கூட்டுதல் மற்றும் கட்டிட வலை. லட்ச்சக்கனக்கானோர் தேவை. ஒரு ஆள் வருவார்களா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.