.

Pages

Saturday, January 5, 2019

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 ஜன.14ந் தேதி வரை வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்!

தஞ்சாவூர் மாவட்டம், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 14.01.2019 வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில்  பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகை ரூ.1000 வழங்குவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது : -
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி பொங்கல் பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை  ரூ.1000 தொடர்புடைய நியாய விலைக் கடைகள் மூலம் 14.01.2019 வரை வழங்கப்படவுள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில்  உள்ள நியாய விலைக் கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகையினை எளிதாக வழங்கும் வகையில் தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அடிப்படையில் தேதி வாரியாக வழங்கப்படவுள்ளது. தேதி வாரியாக வழங்கப்படும் விவரம் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 31.12.2018 அன்று நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்புடைய நியாய விலை கடைகளில் மின்னணு குடும்ப அட்டையில் பதிவு செய்த பின்னர் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் தொகையினை பெற்றுக் கொள்ளலாம்.

குடும்ப அட்டை தொலைந்த மற்றும் கையில் இல்லாத நிலையில் உள்ள அட்டைதாரர்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆதார் அட்டை அல்லது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.  பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை வழங்குவதையொட்டி வருகின்ற 11.01.2019 மற்றும் 13.01.2019 ஆகிய தினங்களில் அனைத்து நியாய விலைக்கடைகளும் வழக்கம் போல் செயல்படும்.

மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் பரிசு தொகை விநியோகம் தொடர்பான புகார்களை மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம். கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற எண்ணிலும், மாவட்ட அளவில் 04362-231336 என்ற எண்ணிலும், தஞ்சாவூர் வட்டத்தில் 04362-230456 என்ற எண்ணிலும், திருவையாறு வட்டத்தில் 04362-260248 என்ற எண்ணிலும், ப10தலூர் வட்டத்தில் 04362-2288107 என்ற எண்ணிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 04372-233225 என்ற எண்ணிலும், கும்பகோணம் வட்டத்தில் 04365-2430227 என்ற எண்ணிலும், பாபநாசம் வட்டத்தில் 04374-222456 என்ற எண்ணிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 0435-2460187 என்ற எண்ணிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 04373-235049 என்ற எண்ணிலும், பேராவூரணி வட்டத்தில் 04373-232456 என்ற எண்ணிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை விநியோக பணியினை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தொடர்புடைய நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசு மற்றும் பரிசு தொகையினை பெற்று தமிழர் திருநாளாம் பொங்கலை சிறப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குநர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.