அதிராம்பட்டினம், ஜன.07
'கிரசண்ட் பிளட் டோனர்ஸ்' (CBD) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில் உலக ஆம்புலன்ஸ் தினத்தையொட்டி, அவசர ஊர்தி விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிராம்பட்டினத்தில்...
அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் பிராச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், அதிரை பைத்துல்மால், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், குருதிக்கொடை தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், அவ்வமைப்பின் அதிரை பேரூர் பொறுப்பாளர்கள் சமீர் அலி, இப்ராஹிம் அலி, சாகுல் அமீது, நவாஸ்கான்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதுக்கூரில்....
மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழக அரசின் 108, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், செந்தலை பொதுநல சங்கம் ஆகியவற்றின் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கலந்துகொண்டன. அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இரத்ததான சேவையாற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை மதுக்கூர் பேரூர் கிளை பொறுப்பாளர்கள் இஜாஸ் கான், நூர் முகம்மது ஆகியோர் செய்திருந்தனர்.
'கிரசண்ட் பிளட் டோனர்ஸ்' (CBD) இரத்த தான சேவை அமைப்பின் சார்பில் உலக ஆம்புலன்ஸ் தினத்தையொட்டி, அவசர ஊர்தி விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
அதிராம்பட்டினத்தில்...
அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் பிராச்சாரத்தை தொடங்கி வைத்து பேசினார். அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், அதிரை பைத்துல்மால், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் ஆகிய அமைப்புகளின் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், குருதிக்கொடை தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். வாகன ஓட்டுனர்கள், வர்த்தகர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில், அவ்வமைப்பின் அதிரை பேரூர் பொறுப்பாளர்கள் சமீர் அலி, இப்ராஹிம் அலி, சாகுல் அமீது, நவாஸ்கான்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதுக்கூரில்....
மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் ஆனந்த தாண்டவம் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழக அரசின் 108, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், செந்தலை பொதுநல சங்கம் ஆகியவற்றின் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கலந்துகொண்டன. அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இரத்ததான சேவையாற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை மதுக்கூர் பேரூர் கிளை பொறுப்பாளர்கள் இஜாஸ் கான், நூர் முகம்மது ஆகியோர் செய்திருந்தனர்.
பட்டுக்கோட்டையில்...
பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்பழகன் ரசாரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம் ஆம்புலன்ஸ் அவசியம் பற்றி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அவ்வமைப்பின் தஞ்சை மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், இரத்ததான சேவையாற்றிய அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். மேலும், தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையின் 'ஆண்ட்ராய்டு செயலி' குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பட்டுக்கோட்டை நகர நிர்வாகிகள் விக்னேஸ்வரன் அருண்குமார் சபரிநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
தஞ்சையில்...
அவ்வமைப்பின் தஞ்சை மாநகர தலைவர் வல்லம் ஷாகின்ஷா தலைமை வகித்தார். தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ், தஞ்சை ஆம்புலன்ஸ், மீனாட்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியவை பிரச்சாரத்தில் கலந்துகொண்டன. நிகழ்ச்சியில், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.