.

Pages

Sunday, January 6, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் வண்ண மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.06
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி விலங்கியல் துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் இணைந்து நடத்திய வண்ண மீன்கள் வளர்ப்பு பயிற்சி முகாம் கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தொடங்கி வைத்து பேசினார். கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை உரை நிகழ்த்தினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை, களத்தூர் வண்ண மீன்கள் வளர்ப்பு விவசாயக் கூட்டுறவு சங்கத் தலைவர் என்.யூ.எஸ் வீரமைந்தன்,  கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஏ.முருகன், சென்னை டிஐஎல் பயோசயின்ஸ் நிறுவன அலுவலர்கள் எஸ்.கார்த்திகேயன், ஜெ. காட்பிரட் பொன்ராஜ், என்.கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு வண்ண மீன்கள் வளர்ப்பு முறை மற்றும் அதன் பயன்பாடு பற்றி விளக்கிப் பேசினர்.

இந்த முகாமில், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பூண்டி, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளின் 9 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 250 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். நிறைவில் இவர்கள் அனைவருக்கும் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாக, முகாம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. குமாரசாமி  வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிகளை முகாம் அமைப்பாளர் பேராசிரியர் அ.  அம்சத் தொகுத்து வழங்கினார். முடிவில் துணை ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் கே. முத்துக்குமரவேல் நன்றி கூறினார்.

முகாமில், கல்லூரிப் பேராசிரியர்கள் ஓ. சாதிக், வி.கானப்ரியா, ஏ. மஹாராஜன், ஜெ. சுகுமாரன், என். வசந்தி உட்பட கல்லூரிப் பேராசிரியர்கள், பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.